அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

வயதும், புதன் தசையும்

ஒரு ஜாதகருக்கு இருபதுவயதிற்கு மேல் புதன் பலம் பெற்று களத்ரஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்று தசை நடத்தினால் படித்த மனைவி வாய்ப்பாள். கணவனை மகிழ்விக்கக் கூடியவளாயும், நல்ல குணவதியாகவும், உத்யோகமுள்ள திறமைசாலியாகவும் இருப்பாள் . வடமேற்குத் திசையிலிருந்து மனைவி வாய்ப்பாள். இவளிடம் எப்போதும் பணம் புழங்கிக் கொண்டே இருக்கும். தெய்வ பக்தி,சாதுர்யம், பெரிய பொறுப்பகளை வகிக்கும் ஆற்றலுடையவளாயும் இருப்பாள்.
வாழ்க்கை ஆரம்ப காலத்தில் புதன் தசை நடப்து விசேஷம். அதிலும் அந்திய காலத்தில் புதன் தசையைப் பெறுபவர்கள் சமய சாஸ்திரத்துக்கும், கல்வி விருத்திக்கும் உழைப்பார்கள். வேதாந்த சாஸ்திரங்களையும், சட்டநுணுக்கம் போன்ற நியாய நூல்களையும் இந்த அந்திய காலத்தில் எழுதலாம். ஆத்ம சாந்தியை உண்டாக்கிக் கொள்வதற்கு இது ஒரு விசேஷமான காலம்.
நடுத்தர வயதுடையவர்களுக்கு புதன் தசை நடக்கும்போது ஜாதகன் அமைதியாகவும், நிதானமாகவும், சத்தியமாகவும் ஒரே நிலைப்பட்ட மனதுடையவனாகவும் இருந்து பிறர் அறியாது பெரும் பொருளைத் தேடுவான், பண ஆசை, குடும்ப சுகம், தர்ம விஷயங்கள், சாஸ்த்திர விஷயங்கள் முதலியவற்றில் பற்றுள்ளவனாகிறான். இக்காலத்தில் ஒரு ஜாதகன் பணத்தையும் பொருளையும், இதர செல்வங்களையும் அசட்டை செய்தாலும் அவைகள் அவனை வலிய வந்து சேர்கிறது. நாம் மேலே கூறியது போல் புதன் சுபராசிகளிலும், கேந்திர,கோண,தனலாப ஸ்தானங்களில் இருந்தால் சுப பலன்களைச் செய்வார்.
புதன் அவர் ஸ்தானங்களை யடைந்தும் இதர அசுப பலன்களைத் தரக்கூடிய கிரகங்களினால் பழுதடையாமலும் இருந்தால் அவர் தரும் பலன்கள்: ஜாதகருக்கு நல்ல குணமுள்ள சிநேகிதர்களையும் அவர்களால் லாபங்களையும், கீர்த்தியையும், உயர்ந்த அந்தஸ்தத்தையும், தொழில் உத்யோகம் முதலியவற்றில் லாபங்களையும், உத்யோக உயர்வையும், சரளமாகவும் அழகாகவும் கருத்தோடும் சபைகளில் பேசும் திறமையையும். தனக்கேற்ற மனைவியையும் கல்வியறிவுள்ள குழுந்தைகளையும் அடைகிறான். இதே புதன் தீயராசிகளிலும், தீய இடங்களிலும், பலவீன முற்றிருந்தால்அப்போது மனக் கவலையும். உயர் அதிகாரிகளிடமிருந்து அதிருப்தியும், சிநேகிதர்களிடம் சண்டை சச்சரவுகளும், அதனால் பொருள் நஷ்டமும், கீழ்த்தரமான நடவடிக்கைகளினால் தன சேதத்தையும், வீண் பிராயாணங்களையும், மந்த நிலையையும், சோம்பலும், விவசாயங்களில் நஷ்டமும், மாமன் வர்க்கத்தாருக்கு நாசத்தையும், இரத்த சோகைபோன்ற நோய் நொடிகளையும் அடைகிறான்.

துவாகுடியில் வெள்ளம்


திருச்சி துவாக்குடி அருகேயுள்ள அசூரில் திருச்சி -தஞ்சாவூர் நெடுஞ்சாலையில் புதிதாக கட்டப்படும் பாலப்பணிக்காக அமைக்கப்பட்டுள்ள மாற்றுச் சாலையில் செல்லும் காட்டாற்று வெள்ளம். குளங்கள் உடைந்து 36 கிராமங்களுக்குள் தண்ணீர் .
இந்த மழைகாலங்களில் தான் மேற்படி பாலங்களை கட்டவேண்டுமா? முன்னரோ அல்லது மழைகாலம் முடிந்த பின்னரோ கட்டக்கூடாதா.

ரோகிணி நட்சத்திரம்

ரோகிணி நட்சத்திரக்காரர்களுக்கு:
பஞ்சபூதங்களில் நீருக்குரிய நட்சத்திரமான ரோகிணி நட்சத்திரக்காரர்கள் நாவல் மரத்தை பொது இடங்களில் நட்டு பயிர் செய்யலாம். அவ்வாறு செய்வதால் பாவங்கள் நீங்கும். நாவல் மரம் ஸ்தல விருட்சமாக உள்ள திருவானைக்கா போன்ற கோயில்களை வழி படுவது நல்லது. பிரம்ம தேவன் இதன் தேவதை.
சிவன் கோயில்களில் உள்ள கர்ப்பக்கிரகத்தில் வெளிப்புற, மாடம் ஒன்றில் பிரம்மன் இருப்பார். அவரை வணங்குக. இயன்றவர்கள் உடுப்பிகிருஷ்ணரை தரிசனம் செய்தல் விசேஷம். ஓம் நமசிவாய என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை காலை மாலை இரண்டு வேளையும் ஜெபம் செய்யுங்கள். இடைவிடாமல் சக்கி தேவியை வணங்குங்கள். முடிந்தால்முத்து பதித்த மோதிரத்தை அணியுங்கள். தடைகள் நீங்கப் பெறுவீர்கள்.

மனிதன் இருக்க வேண்டிய முறைகள்

மனிதன் எப்போதும் தூங்காமலிருக்க வேண்டும்
  1. எப்போதும் அமிர்த்ததைச் சாப்பிட்டுக் கொண்டு, காயத்திரியை ஜபித்தபடி இருக்கவேண்டும்
  2. எப்போதும் சத்தியமே பேச வேண்டும்
  3. எப்போதும் பரிசுத்தனாக இருக்க வேண்டும்
  4. எப்போதும் பிரம்மசாரியாக இருக்க வேண்டும்
  5. எப்போதும் மிச்சத்தையே சாப்பிட வேண்டும்
இது எங்ஙனமெனில்:
  1. பகலில் தூங்காதவன் தூக்கத்தை விட்டவனாவான்
  2. விருந்தினர்கள் வேலைக்காரர்களெல்லாம் சாப்பிட்ட பிறகு தான் சாப்பிடுபவன் அமிர்தத்தைச் சாப்பிடுவனாவான்.
  3. கொடுப்பதைத் தன் இயலபாகக் கொண்டமனிதன் எப்போதும் உண்மை பேசுகிறவனாவான்.
  4. தானம் கொடுப்பவன் பரிசுத்தனாகிறான்.
  5. ருது காலத்தில் மட்டும் தன் மனைவியைச் சேருகிறவன் பிரம்மசாரியாகிறான்.
  6. தேவ பூஜை நைவேத்தியங்கள், பித்ரு காரியங்கள் செய்த பிறகு, மற்றவர்களுக்கு அளித்து, பிறகு சாப்பிடுபவன் மிச்சத்தை சாப்பிட்டவனாகிறான்.
இத்தகைய வர்களுக்கு பிரம்ம லோகத்தில் முடிவற்ற இடங்கள் இருக்கின்றன.
பீஷ்மர் யுதிஷ்டிரருக்கு பல தர்ம விஷயங்களைக் கூறிவரும் போது. இடையில் சுக்ராச்சாரியர் பலிச் சக்ரவர்த்திக்குக் கூறியவை இவை என்று கூறி அவற்றை எடுத்துச் சொல்கிறார்.

இதையே போராசிரியர் ராதாகிருஷ்ணன் சொன்னார்
  • படுத்து தூங்காதீர்கள்
  • தாயருக்கு செலவுக்கு பணம் கொடுக்காதீர்கள்
  • தேர்வுக்குப் படிக்காதீர்க்ள்
அது இது தான்
  • தூக்கம் வந்த பின் படுத்துக்கொள்ளுங்கள்
  • தாங்கள் வாங்கிய சம்பளத்தை தாயாரிடம் கொடுத்து அவரிடம் உங்கள் தேவைக்கு வாங்கிக்கொள்ளுங்கள்
  • தேர்வுக்கு முன்னரே படித்து விடுங்கள்
என்று சொன்னார்

இது வரை சென்னையில் 76 கோடி உதவித்தொகை

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதி யில் தமிழக அரசு சார்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 2 ஆயிரம் ரொக்கப் பணம், வேட்டி-சேலை, 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண் எண்ணை ஆகியவை வழங்கப்படுகிறது. முதல்கட்டமாக வடசென்னை பகுதியில் 3 லட்சத்து 27 ஆயிரம் குடும்பங் களுக்கு ரூ. 76 கோடி மதிப்பில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.

2-ம் கட்டமாக இன்று மயிலாப்பூர், திருவல்லிக்கேணி பகுதியில் நிவாரண உதவிகள் வழங்குவதற்காக 100 ரேசன் கடைகள் மற்றும் 38 நிவாரண மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இங்கு 50 கவுண்டர் கள் மூலம் பணம் பட்டுவாடா செய்யப்பட்டு வருகிறது.

இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் இன்றும், நாளை யும் நிவாரண உதவிகளை பெற்றுக் கொள்ளலாம். இதை வாங்குவதற்காக இன்று காலையிலேயே ரேசன் கடை முன்பு நீண்ட வரிசையில் ஆண் களும், பெண்களும் காத்து நின்றனர். சுமார் 75 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கப்படுகிறது.
செய்தி மாலை மலர்
இவ்வளவு குடும்பங்கள் சென்னையில் மழையில் பாதிக்கப்பட்னவா? அல்லது சென்னை குடிசை வாசிகள் அனைவருக்கும் வழங்கப்படுகிறதா தேர்தலை? ஒட்டி.

பத்திக்கிச்சு வத்திக்குச்சியில்லாம குஷ்பு விவகாரம்


"திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு கொள்வதில் தவறு இல்லை'' என்று நடிகை குஷ்பு சொன்ன கருத்து தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

அவர் மீது 32க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. அவருக்கு ஆதரவு தெரிவித்த நடிகை சுகாசினியும் எதிர்ப்புக்குள்ளானார்.

குஷ்புவின் செக்ஸ் கருத்து பற்றி கடந்த புதன்கிழமை டெல்லியில் நடந்த ஒரு விழாவில் பேசப்பட்டது. அந்த விழாவில் பங்கேற்ற பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவிடமும் குஷ்பு கருத்து பற்றி கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சானியா மிர்சா, "செக்ஸ் உறவு என்பது திருமணத்துக்கு முன்பு என்றாலும் சரி அல்லது திருமணத்துக்கு பின்பு என்றாலும் சரி, அது மிகவும் பாது காப்பானதாக இருக்க வேண்டும்'' என்று கூறினார். குஷ்புவின் கருத்துக்கு ஆதரவளிப்பது போல அவர் பேசினார். இது அவருக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

சானியா மிர்சாவின் சொந்த ஊரான ஐதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் நேற்று சானியாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. ஐதராபாத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான முஸ்லிம்கள் கலந்து கொண்டு சானியாவை கண்டித்து கோஷ மிட்டனர்.

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பும் சானி யாவை கண்டித்து ஆந்திராவின் பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டக்காரர்கள் "சானியா ஒழிக'' என்று கோஷ மிட்டனர். சானியா நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் கோஷமிட்டனர்.

இன்றும் ஆந்திராவில் சில இடங்களில் சானியா மிர்சாவுக்கு எதிராக போராட்டங்கள் நடந்தன. அப்போது சானியாவின் படங்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. சிலர் சானியா படத்தை செருப்பால் அடித்தனர்.

ஐதராபாத்தில் சானியாவின் கவர்ச்சி உருவ பொம்மை தீ வைத்து கொளுத்தப்பட்டது. சானியாவின் குட்டை பாவாடை உடைக்கு முன்பு எதிர்ப்பு தெரிவித்த முஸ்லிம் மதக் குருக்கள் தற்போது செக்ஸ் கருத்துக்கும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

முஸ்லிம் மதக்குரு ஒருவர் இதுபற்றி கூறுகையில், "திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவில் ஈடுபடலாம் என்று சானியா கூறினால், உண்மையில் அவர் முஸ்லிமே இல்லை என்றுதான் அர்த்தம். அவருக்கும் இஸ்லாத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை'' என்றார்.

சன்னி உலமா போர்டு பொதுச் செயலாளர் மவுலானா ஹசீபுல் ஹசன் சித்திக் கூறுகையில், "இஸ்லாமியத்தில், திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவில் ஈடுபடுவது பெரிய பாவமாக கருதப்படுகிறது. ஒரு முஸ்லிம் ஆணோ அல்லது பெண்ணோ திருமணத்துக்கு முன்பு ஒன்றாக கலக்க இயலாது. செக்ஸ் பற்றி எல்லாம் பேசக் கூடாது.

ஒரு முஸ்லிம், திருமணத்துக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்பதை கடைபிடித்தால் அவன் அல்லது அவள் இஸ்லாமிய மதத்தில் இருந்து விலக்கப்பட்டதாகத்தான் கருதப்படும்'' என்றார்.

அவர் மேலும் கூறுகையில், "சானியா உடை பற்றி நாங்கள் சொன்னபோது பலர் எங்களை எதிர்த்தனர். ஆனால் இன்று அவர்களே சானியாவின் செக்ஸ் பேச்சால் அதிருப்தி அடைந்துள்ளனர். சானியாவின் பேச்சு இஸ்லாம் மதத்துக்கு மட்டும் எதிரானது அல்ல.

இந்திய பண்பாட்டுக்கே எதிரானது. திருமணத்துக்கு முன்பே செக்ஸ் உறவு வைத்துக் கொள்ளலாம் என்று வலியுறுத்தப்பட்டால் மனிதனுக்கும் மிருகத்துக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்'' என்றார்.

ஐதராபாத்தில் உள்ள மற்றொரு இஸ்லாமிய மதக்குரு கூறுகையில், "இந்தியர்கள் உணர்வை சானியா மிர்சா காயப்படுத்தி விட்டார். இதற்காக அவர் எல்லாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்'' என்றார்.

ஐதராபாத்தில் ஒரு பள்ளியில் பணிபுரியும் சுபா என்ற ஆசிரியை கூறுகையில், "சானியா மிர்சாவின் செக்ஸ் உறவு கருத்து இந்திய இளைஞர்களை தவறான பாதைக்கு அழைத்து சென்று விடும். செக்ஸ் பற்றி பேசும் போது நமது பாரம்பரியத்தை மனதில் வைத்துக் கொண்டு பேச வேண்டும்'' என்றார்.

ஹமீது அகமது என்ற மாணவர் கூறுகையில், "சானியாவின் பேச்சு கண்டனத்துக்குரியது. திருமணத்துக்கு முன்பு செக்ஸ் உறவு கொள்ளலாம் என்று அவர் சொல்லி இருப்பதன் மூலம் ஒவ்வொரு இஸ்லாமியரின் மனதை காயப்படுத்தி விட்டார்.

குஷ்பு ஒரு நடிகை. அவர் அப்படித்தான் பேசுவார். செக்ஸ் பற்றி அவர் சொன்ன கருத்து எங்களுக்கு அதிர்ச்சியை தரவில்லை. செக்ஸ் பற்றி நடிகைகள் பேசுவது பெரிய விஷயமாக எங்களுக்கு தெரிய வில்லை.

ஆனால் விளையாட்டு வீராங்கனை சானியா மிர்சா அப்படி அல்ல. இந்தியாவுக்கு பெருமை தேடி தருபவர். அவர் ஒரு நடிகை சொன்ன செக்ஸ் கருத்துக்கு வக்காலத்து வாங்கி இருப்பது எங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது'' என்றார்.

நிறைய பேர் மாணவர் ஹமீது அகமது போல எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.
மாலை மலர் செய்தி
அடுத்து உலகப்பிரச்சனை தான்

பஞ்ச சபைகள்

நடராஜர் நர்த்தனமிடும் ஐந்து சபைகள்:
  1. திருநெல்வேலி - தாமிர சபை
  2. குற்றாலம் - சித்தர சபை
  3. மதுரை - மாணிக்க சபை
  4. சிதம்பரம் - பொற் சபை
  5. திரு ஆலங்காடு - ரத்தன சபை

ஒரு பூதத்தின் கதை

இருள் சூழ்ந்த காடு ஒன்றில் சாத்யகியோடும் அண்ணன் பலராமனோடும் வேட்டையாடிக் கொண்டிருந்தான் கண்ணன். வெகுநேரமானதால் இரவை காட்டிலேயே கழிக்க முடிவு செய்தனர்.
ஒரு மரத்தடியில் தங்கிய மூவரில் இருவர் உறங்க, ஒவ்வொரு ஜாமமும் ஒருவர் காவல் புரிய வேண்டும் என்ற திட்டப்படி கண்ணனும், பலராமனும் உறங்க முதல் ஜாமத்தில் சாத்யகி காவல் காத்தான். அப்போது அங்கு ஒருபூதம் தோன்றியது. அது சாத்யகியிடம் படுத்துத் தூக்கும் இருவரையும் கொன்று தின்ன உதவி கேட்டது. கோபமுற்ற சாத்யகி ஆவேசத்தோடு பூதத்தைக் கொன்று போட எண்ணமிட்டான் சாத்யகி கோபம் அதிகமாக அதிகமாக பூதத்தின் பலமும், ஆற்றலும் பெருகியது கடைசி வரையிலும் பூத்ததை அவனால் கொல்ல முடியவில்லை.
முதல் ஜாமம் முடிந்தது. பூதமும் மறைந்தது. இரண்டாம் ஜாமத்தில் சாத்யகி படுத்துக்கொள்ள பலராமன் காவல் செய்தான். அப்போதும் பூதம் தோன்றியது. பலராமன் பூத்தின் ஆற்றல் ரகசியம் தெரியாமல் கோபத்துடன் போரிட்டான். பூதத்தை வெல்ல முடியவில்லை. மூன்றாம் ஜாமம் தொடங்கியது. பூதம் சென்று மறைந்தது. கண்ணன் காவல் புரியத் துவங்கினான்.
அவன் முன்னாலேயும் பூதம் தோன்றியது. கண்ணன் அதைப் பார்த்து நகைத்தான். "எதற்காகச் சிரிக்கிறாய்?" என்று பூதம் கேட்டது. "உன்னைப் பார்த்த மகிழ்ச்சியில் நகைத்தேன்" என்றான். கோபத்துடன் பூதம் சண்டைபோட ஆரம்பித்தது. கண்ணனோ சிறிதும் கோபங்கொள்ளாமல் மோதினான். சினம் கொள்ளாத கிருஷ்ணனின் செய்கையால் பூத்தின் ஆற்றல் குறைந்தது. அவன் சிரிக்க சிரிக்க பூத்தின் உருவமும் இளைத்தது. பலமும் குறைந்து போய் இறுதியில் ஒரு புழுவாய் போனது. கண்ணன் அதைக் கச்சையில் எடுத்து முடிந்து கொண்டான். பொழுது விடிந்தது. சாத்யகியும், பலராமனும் தாங்கள் இரவு காவலுக்கிருந்தபோது பூத்துடன் நடந்த பேரைப் பற்றி கூறினர். கண்ணன் தன் கச்சையில் முடித்திருந்த புழுவை அவர்களிடம் காட்டி," நீங்கள் போரிட்ட பூதம் தான் இது" என்றான்.
தான் காட்டிய புழுவைப் பார்த்துத் திகைத்துப் போன் அவர்களிடம், "சினம்தான் இதன் ரூபத்தில் வந்தது. உங்கள் சினம் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ அந்த அளவு இதன் பலமும், அளவும் அதிகரிக்கும். இதனுடன் அன்பாய் சிரித்துக் கொண்டே நான் சண்டையிட்டதால் இதன் தோற்றமும், வலிமையும் குறைந்து போய் புழுவாய் சிறுத்துப்போக வைத்துவிட்டது" என்றான்.
இக்கதை நமக்கு கோபத்தின் தீமையை போதிக்கிறது அல்லவா? ஆம் நல்வழிப்படுத்தும் போதனையே, கண்ணனின் செய்கள்யாவும்.

கிருஷ்ணா அர்ப்பணம்

பிறந்த திதிப்படி குணங்கள்

தேய்பிறையில் பிறந்தவர்களை திதிப்படி பார்ப்போம்.
  1. பிதமை: இந்தத் தேய்பிறைக்காரர் மன்னிக்கும் மன்பான்மை கொஞ்சங்கூட இல்லாதவர்.
  2. துதியை: இந்தத் தேய்பிறைக்காரர் குடும்பத்தை விட்டு விலகி அவர்களோடு ஒட்டுறவின்றி வாழ விரும்பவார்.
  3. திருதியை: இந்தத் தேய்பிளைக்காரர் புதுமையான காரியங்களை செய்ய நினைப்பாவர். பழமையை வெறுப்பவர்.
  4. சதுர்த்தி: இந்தத் தேய்பிறைக்காரர் பணம் சம்பாதிப்பதையே இலட்சியமாகக் கொண்டவர்.
  5. பஞ்சமி: இந்தத் தேய்பிறைக்காரர் ஒழுக்கத்தை உயிரினும் மேலாக நினைப்பவர்
  6. சஷ்டி: இந்தத் தேய்பிறைக்காரர் புகழ் ஆசை மிகந்தவராய் இருப்பார்.
  7. சப்தமி: இந்தத் தேய்பிறைக்காரர் குழந்தைகள் மீது அதிக அன்புள்ளவர்.
  8. அஷ்டமி: இந்தத் தேய்பிறைக்காரர் தயாள குணம் கொண்டவர்
  9. நவமி: இந்தத் தேய்பிறைக்காரர் பொருள் படைத்தபணக்காரரின் நட்பை விரும்பவார், பணக்காரர்கள் இவரைத் தேடி வந்து நட்பு கொள்வர்.
  10. தசமி: இந்தத் தேய்பிறைக்காரர் பெண்பித்துப் பிடித்து அலைவர்.
  11. ஏகாதசி: இந்தத் தேய்பிறைக்காரர் மந்திரத் தந்திரங்களை கற்க ஆர்வ முடையவராய் இருப்பார்.
  12. துவாதசி: இந்தத் தேய்பிறைக்காரர் எண்ணியதை எண்ணியபடி முடிப்பார்.
  13. த்ரயோதசி: இந்தத் தேய்பிறைக்காரர் எந்த நிலையிலும் உண்மைக்கு மாறாக பொய் சொல்ல மாட்டார்.
  14. சதுர்த்தசி: இந்தத் தேய்பிறைக்காரர் எதையும் ஆழ்ந்து யோசிப்பார்.

இந்தியர் அமெரிக்காவில் கைது

ராடாரை ஏமாற்றி பறக்கும் நவீன தொழிநுட்பம் கண்டு
பிடித்த இந்தியரையே கைது செய்தது அமெரிக்கா
.
ராடார்களை ஏமாற்றிப் பறக்கும் நவீன தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்து அமெரிக்க ராணுவத்திற்குப் பேருதவி செய்த இந்திய பொறியாளரை அமெரிக்க உளவுத்துறை
கைது செய்துள்ளது.
நவீன தொழில் நுட்பத்ததை வெளிநாடுகளுக்கு விற்றதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நொஷிர் கவாடியா அமெரிக்காவில் வசிக்கும் இந்திய பொறியாளர் வயது 61. பல ஆண்டுகளுக்கு முன்பே அமெரிக்காவில் குடியேறினார். நவீன கருவிகளை வடிவமைப்பதில் இவருக்கு அபார திறமையுண்டு.
கருவி வடிவமைப்புத்துறையில் சர்வதேச புகழ்பெற்ற நார்த்தராப்க்ரமென் கார்ப்பரேசன் என்ற அமெரிக்க நிருவணத்தில் 18 ஆண்டுகளாக பணியாற்றிய இவர், 1986ல் அந்த நிருவணத்தில் இருந்து விளகினார். பிறகு பல்வேறு நிறுவணங்களுக்கம் வடிவமைப்பு ஆலோசகராக பணிபுறிந்து வந்தார்.
இவரது கண்டுபிடிப்புகளில் ராணுவக் கருவிகளும் உண்டு .
அமெரிக்க ராணுவத்தில் , ராடார்களின் கண்ணில் சிக்காத நவீண தொழில் நுட்பம் கொண்ட போர் விமானங்கள் உண்டு. இந்த தொழில் நுட்பத்தைக் கண்டு பிடித்ததிலும், இந்த தொழில் நுட்பம் கொண்ட 'பி-2 பாம்பர்ஸ்' என்ற குண்டு வீச்சு விமானங்களை வடிவமைத்ததிலும் நொஷிர் கவாடியாவின் பங்கு அதிகம்.
இந்த கண்டுபிடிப்புகள் நடந்த வேளையில், "நொஷிர் கவாடியாவின் குழு கண்டுபிடித்த தொழில் நுட்பம், அமெரிக்க விமானப்படையின் பலத்தைப் பலமடங்கு அதிகரித்துவிட்டது. எதிரி ராடார்களின் கண்ணில் மண்ணைத் தூவி விடும் தொழில் நுட்ப வசதி வந்துவிட்டதால்,
இனிமேல் நமது குண்டுவீச்சு விமானப்படை வீர்ரகளுக்கு உயிராபத்தும் குறைந்துவிடும். இந்த பேருதவியைச் செய்த நொஷிர் கவாடியா குழுவை எவ்வளவு பாராட்டினாலும் தகும். நொஷர் கவாடியா, அமெரிக்க காவின் ஹீரோ" என்று அமெரிக்க அரசும் ராணுவமும் அவரைப் போற்றிப் புகழ்ந்தன.
இப்பொது, இதே நொஷிர் கவாடியவை அமெரிக்க உளவுப் படையான எப்.பி.ஐ கைது செய்துள்ளது.
இதுபற்றி அமெரிக்க அரசின் துணை அட்டர்னி ஜெனரல் கென்ஸொரன்சன், வாஷிங்டனில் 07-11-05ல் அளித்த பேட்டி:
ராடார்களை ஏமாற்றும் நவீன தொழில் நுட்பத்ததையும், அமெரிக்க விமானப்படையில் இருக்கும் வேறு சில நவீன தொழில் நுட்பங்களையும் சில வெளிநாடுகளுக்கு நொஷர் விற்றுள்ளார். சில வெளிநாடுகளுக்கு சென்று இந்த நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவது பற்றி அங்குள்ள சிலருக்கு பயிற்சியும் அளித்துள்ளார். இதற்கான ஆதாரங்கள் சிக்கியுள்ளன.
நொஷிரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர் மற்றும் சி.டி.க்களில், அமெரிக்க விமானப் படையின் ரகசியங்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாக புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சமார் 14 ஆயிரம் ரகசியக் கோப்புகளை அவர் நகல் எடுத்து வைத்துள்ளதும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
இந்த குற்றங்கள் தொடர்டபாக, ஹவாயின் மாய் நகரில் கடந்த புதன்கிழமை அன்று அவர் கைது செய்யப்பட்டார்.
இப்போது, ஹோனலூலு பகுதியில் உள்ள விசாரணைமையத்தில் காவலில் வைக்கப் பட்டுள்ளார். எப்.பி.ஐ. அதிகாரிகள் மற்றும் ராணுவ விசாரணைக் குழுவினர் அவரிடம் விசாரித்து வருகின்றனர். அவர் மீதான நீதிமன்ற விசாரணை விரைவில் தொடங்கும்.
ராணுவ ரகசியங்களைக் கடத்திவிற்பது ராஜதுரோகக் குற்றம். இந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால் நொஷிருக்கு மிகக் கடுமையான தண்டனை கிடைக்கும் .
இவ்வாறு கெண் ஸோரன்டசன் தெரிவித்தார்.
இதுபற்றிபேட்டியளித்த நொஷிரின் மகன் ஆஷ்டன் கவாடியா, "என் தந்தையைத் தவறான தகவலின் பேரில் கைது செய்துள்ளனர். அவர் நிரபராதி என்பதை நீதிமன்றத்தில் நிரூபிப்போம்" என்று தெரிவித்தார்.
தகவல் தினமலர் 08-11-08

தீயவருக்கு செய்யும் உதவி தீங்கு

அன்றொரு நாள் ஒருவன் தனிவழிப்பதையில் நடந்து
சென்று கொண்டிருந்தான் அப்பொழுது ஆங்கொரு
பறையின் கீழொரு பாம்பு சிக்கிக்கொண்டிருக்க
அவனதைக் காக்க; பறையை நகற்றினால் பாம்பு
கடிக்குமா அன்றி நன்றிசொல்லி நகருமா யென யோசித்து
பின் அப்பாறைதனை நீக்கி பாம்பை காப்பற்ற
அப்பாம்பானது அவனை நேக்கி ,"இவ்வளவு நேரம் எனை காப்பாற்றாமல்
ஏன் சிந்தித்தாய் நானுன்னை கடிக்கப்போகிறேன் "என கூறி அவனை நெருங்க
அவனோட அது விரட்ட . அவ்வழிவந்த நரியொன்று ,"ஏனய்ய ஓடுகின்றனை
அவரவமே ஏனவரை துரத்துகின்றனை" என வினவ?
இருவரும் தங்கள் வழக்கை முறையிட தனக்கு விளங்கவில்லை
ஆரம்பமுதல் தெளிவாக செய்து காட்டுங்கள் என கேட்க
அவனோ மறுபடியும் பாம்பை அந்த பாறையின் இடுக்கில் வைத்து விட்டு
தான் முதலில் வந்த பாதைவழியே வந்து காட்டுகிறான் அங்கு நின்றான்;
நரிகேட்டது," நீ ஏன் காப்பற்றாமல் நின்றாய்."
அவன்," காப்பாற்றினல் பாம்பு என்னைக் கடிக்குமா அன்றி கடிக்காமல் போகுமாஎன யோசனை செய்தேன்" என்றான் .
நரி,"சரி இப்பொழுது என்ன தெரிந்து கொண்டாய் "
அவன்,"கடிக்கும் எனத் தெரிந்து கொண்டேன் "
நரி," அப்படி என்றால் நீ என்ன செய்ய வேண்டும் "
அவன்,"காப்பாற்றாமல் செல்ல வேண்டும்"
நரி," அப்படியே செய்"
அவன் சென்று விட்டான் பாம்பு ,"தந்திர நரியே " என கத்திச் செத்தது

திருச்சியில் வெள்ளம் காரணம் என்ன?

எவ்வளவு அளவு மேட்டூர் அணையிலிந்து தண்ணீர் வந்தாலும் அதை மேல் அணையிலிருந்து கெள்ளிடத்திற்கு திருப்பி விட அதன்கெள்ளலவு மற்றும் வேகமான போக்குக்கு வசதியாக இருக்கவேண்டும். தண்ணீர் பற்றாத காலங்களில் தண்ணீரை சேமித்து வைக்க அங்கே கதவனைகள் கட்டி வைக்க வேண்டும். இரண்டு லட்சத்திற்கு மேலாக தண்ணீர் வந்தாலும் அதை வடியவைக்கக் கூய வசதி கொள்ளிடத்தில் இல்லாததலும் தான் திருச்சி நகருக்குள் தண்ணீர் பாய்ந்தது.
நஞ்சை நிலங்களில் வீட்டு மனைகளாகிவருவதால் அங்கு தண்ணீர் இருக்கத்தான் செய்யும் உதாரணமாக திருச்சி பாண்டமங்கலத்தில் பாத்திமா நகர் என்ற பகுதி நஞ்சை நிலமாக இருந்து அதை தற்போது வீட்டு மனைகளாக ஆக்கியபின் மனைகள் வாங்கியவர்கள் சிலர் வீடுகள் கட்டாமல் இருப்பதால் வயல் இருந்து ஆழத்திலேயே மனையிருப்பதால் மழைநீர் அதில் தேங்கி நிற்கிறது அந்த மனையைச் சுற்றி மாநகராட்சி சாலை அமைத்துள்ளதால் அந்த சாலை வயல் வரப்பு போலவும் மனை வயல் போலவும் இருப்பதால் தண்ணீர் தேங்கி தான் நிற்கும். இதற்கு வடிகால் வசதியிருக்கா என்றால் இல்லை; வயல்களாக இருக்கும் போது ஒவ்வொரு வயலாக வடிந்தும் உபரிநீர் வடிவதற்கென்றே ஒரு வாய்க்கால் இருக்கும் அதன் வழியா தண்ணீர் வடிந்து விடும் . தண்ணீர் வடியக்கூடிய பள்ளப்பகுதியில் மோடக ஆக்கி வீடு கட்டி விடுவதால் எங்கு வடியும். இதற்கு பின் காலத்தில் வராமல் இருக்கு சம்பந்த பட்ட நிபுணர்களை வைத்து அளவெடுத்து வடிகால் வசதியை செய்ய வேண்டும்.
ஒரு கட்சி அரசாட்சி செய்யும் போது சில திட்டங்களைப் போட்டு செயல்படும் போது வேறு கட்சி ஆட்சிக்கு வந்தால் அதை தூக்கி கிடப்பில் போட்டு விடுகிறது. அப்படித்தான் இதுவும்
1999ல் திருச்சி பகுதி மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது அப்போது தமிழக முதல்வராக இருந்த கருணாநிதி திருச்சியை வெள்ளம் பாதிக்கபட்ட பகுதியைக் காண வந்தார் அப்போது உறையூர், அரவானூர் மக்கள் பலமாக எடுத்துச்சொல்லவும் ; இனி வெள்ளம் பாதிக்காத வகையில் ரூ.50 கோடியில் வாய்க்கால்களை அகலப்படுத்த நிலம் கையப்படுத்த ஏற்பாடாகியது. அந்த திட்டம் அப்படியே கிடப்பில் போட்பட்டுள்ளது.
உள்ளுர் திட்டக்குழுமம் வீட்டு மனைகள் வரைபடம் அனுமதி வழங்கும்முன் தண்ணீர் வடிவதற்காண வழிமுறைகண்டபின்னே அனுமதி வழங்கினால் நன்றாக இருக்கும். அதாவது சாலைக்கு இடம் ஒதுக்கும் போதே மழைநீர் அல்லது வெள்ளம் வடிவதற்கும் ஒரு இடத்தை ஒதுக்கச் சொல்லி அனுமதி வழங்கலாம்.

மரண தண்டனையை நீக்கக் கூடாது

கொலை குற்றம் செய்தவர்களுக்கு தூக்குத் தண்டனைஎன இருக்கம் போதே இவ்வளவு கொலை நடக்கிறது. அது இல்லை யென்றால் நி்த்தம் பல கொலை நடக்கும் ; தவறு செய்தவனுக்கு தண்டனை என இருக்கும்போதே இவ்வளவு நடக்கையில் . தூக்குத் தண்டனையில்லை யென்றால் சொல்லவும் வேண்டுமோ? அவனவன் துப்பாக்கியும், கத்தியையும், கொலைகருவிகளை எடுத்துக்கொண்டு கொண்று குவித்து விடுவார்கள் அல்லவா? இப்பொழுது இருக்கும் நடைமுறைசட்டத்தைதே கடைபிடிக்கலாம் என்பதே எனதுகருத்து.

தினமணி செய்தியில் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர்.சி. லஹொதி

மரண தண்டனையை நீக்கக் கூடாது
புதுதில்லி, நவ. 1: அரசமைப்புச் சட்டத்தில் இருந்து மரண தண்டனையை நீக்கக் கூடாது என்று திங்கள்கிழமை பதவியிலிருந்து ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆர். சி. லஹோதி கூறியுள்ளார்.
மரண தண்டனை குறித்து சமீபத்தில் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கூறிய கருத்து தொடர்பான விவாதம் தற்போது நடைபெற்று வரும் நிலையில் தலைமை நீதிபதி லஹோதியின் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
தில்லியில் உள்ள தமது அலுவலகத்தில் திங்கள்கிழமை அவர் அளித்த பேட்டி:
அரசமைப்புச் சட்டத்தில் இருந்து மரண தண்டனை முறையை நீக்கக் கூடாது. கொடிய குற்றம் புரிந்தவர்களுக்கு மரண தண்டனை அளிக்கும் முறை நாகரிக மனிதன் தோன்றிய காலம் முதலே இருந்து வருகிறது. மரண தண்டனையை நிறுவேற்றும் முறைதான் நாட்டுக்கு நாடு மாறுபடுகிறது.
பொது இடங்களில் குண்டு வைத்து நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் உயிரைக் குடிக்கும் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனையைத் தவிர வேறு எந்தத் தண்டனை கொடுக்க முடியும்.
மரண தண்டனை வழங்கும் முறை இந்தியக் குற்றவியல் சட்டத்தில் தொடர வேண்டும். மரண தண்டனையை மிக மிக அரிதாகவே வழங்க வேண்டும் என்று தமது தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது.
மரண தண்டனை விவகாரத்தில் மேற்கத்திய நாடுகளின் நிகழ்வுகளை நாம் அப்படியே எடுத்துக் கொள்ளக்கூடாது.
ஒருவருக்கு மரண தண்டனை வழங்கும்போது அவர் தொடர்பான வழக்கின் அனைத்து அம்சங்களும் மிகவும் ஆழமாக ஆராயப்படுகிறது. அதன்பிறகே மரண தண்டனை வழங்கப்படுகிறது.
மரண தண்டனை விதிக்கப்படும்போது குற்றவாளியின் குடும்பத்தினர் பாதிக்கப்படுவர் என்பதே நம் கண் முன் நிற்கும்; அதையே பெரும்பாலானோர் வாதமாக வைப்பர். பயங்கரவாதச் செயல்களால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான குடும்பத்தினரின் நிலை குறித்து நாம் சிந்திப்பதே இல்லை. பயங்கரவாதச் செயலால் ஒரு குடும்பத்தில் உயிரோடு எஞ்சியிருந்தது சிறு குழந்தை மட்டுமே என்பது எனது கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
மரண தண்டனை குற்றவாளிகளுக்கு மீண்டும் வாழ்வு அளிக்க முடியுமா? என்று கேட்பவர்களை நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். தமது கொடூரச் செயலால் உயிரிழந்த நூற்றுக்கணக்கான அப்பாவிகளுக்கு பயங்கரவாதிகளால் மீண்டும் உயிர் கொடுக்க முடியுமா? என்பதுதான் எனது வாதம்.
மரண தண்டனையில் இருந்து பணக்காரர்கள் தப்பி விடுகின்றனர்; ஏழைகள் மட்டுமே மாட்டிக் கொள்கின்றனர் எனக் கூறுவதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.
பயங்கரவாதத்தை ஒழிக்க அரசியல் உறுதி வேண்டும்: பயங்கரவாதத்தை ஒழிக்க அரசியல் உறுதி வேண்டும். பயங்கரவாதத்தை ஒழிக்க புதிய சட்டம் இயற்ற வேண்டும்.
இது தொடர்பாக அறிவியல்பூர்வமான ஆய்வு நடத்தப்பட வேண்டும். பிரச்சினைகள் புதிது புதிதாக எழும்போது அவற்றுக்கேற்ற முறையில் தீர்வு காண வேண்டும்.
பயங்கரவாத ஒழிப்பில் பஞ்சாபில் மேற்கொண்ட நடவடிக்கைகளை உதாரணமாக எடுத்துக் கொண்டு அதை நாடு முழுவதிலும் அமல்படுத்த வேண்டும்.
பொடா தவறாகப் பயன்படுத்தப்படுகிறதா? பொடா சட்டம் நீதித்துறையினரால் தவறாகப் பயன்படுத்தப்படவில்லை. அச்சட்டத்தை அமல்படுத்துவோர்தான் அதைத் தவறாகப் பயன்படுத்துகின்றனர். இந்த விஷயத்தில் அரசுகளைக் குற்றம் கூறவில்லை. அதை யார் பயன்படுத்துகிறார்களோ அவர்களைத்தான் நான் கூறுகிறேன் என்றார் லஹோதி.