1960களில் இந்தி எதிர்ப்பு என்றபெயரால் 2 தலைமுறை தமிழர்களை இந்தி படிக்கவிடாமல் செய்த கருணாநிதி இன்று 'தன் பேரன் தயாநிதி மத்திய அமைச்சர் ஆக்கப்பட்டதற்கு அவரது இந்தி அறிவே காரணம்' என்கிறார். இந்த கருணாநிதி வார்த்தைகளை வேத வாக்காக கொண்ட இளிச்ச வாய்த்தனத்தால், வட, மத்திய, கிழக்கு மாநிலங்களில் பிழைப்பு தேடிச் சென்ற தமிழர்கள் இந்தி தெரியாமல் அனுபவிக்கும் கஷ்டங்கள் கொஞ்ச நஞ்சமல்ல.
இது போதா தென்று இப்போதுபுதிதாகப் புறப்பட்டுள்ளார் ராமதாஸ். கருணாநிதி இந்திக்கு எதிரி என்றால். இவர் ஆங்கிலத்துக்கு எதிரி, இன்று உலகமயமாக்களில் ஆங்கிலம் இல்லாமல் ஓர் அணுவும் அசையாது என்பதால் ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகள் கூட ஆங்கிலம் படிக்க ஆரம்பித்து விட்டன. ஆனால் தமமிழகத்தில் ஆங்கிலத்துக்கு மங்களம் பாட கிளம்பி விட்டார் ராமதாஸ்.
தமிழினத்தைக் காப்பதாகக் கூறி, தமிழில் தான் பெயர் வைக்க வேண்டும்என்று சொல்லும் ராமதாசின் பேத்திகள் பெயர் ஸங்கமித்ரா, ஸம்யுக்தா இவர்கள் படிப்பதோ ஆங்கிலப்பள்ளி. அந்தப் பள்ளியில் இரண்டாவது மொழி இந்தி. ஆனால் தமிழகத்தில் உள்ள ஏழைத் தமிழன் மட்டும் ஆங்கிலம் படித்து விடக்கூடாது. 5 ஆண்டுகள் அமைச்சராக இருக்கப்போகும் அன்புமணி, தனது குழந்தைகளை டில்லியில் தான் படிக்க வைக்க வேண்டுமா?.
இங்குதான் அவர் குடும்பத்தினர் இருக்கிறார்களே, இங்கேயே தமிழ்வழிக் கல்வி படிக்க அரசுப் பள்ளிகளில் சேர்க்க வேண்டியதுதானே!
கருணாநிதி போல தனக்கும் தனதுகுடும்பத்துக்கும் ஒரு நியாயம், ஊருக்கு ஒரு நியாயம். இதை யாராவது அவரிடம் கேட்டால் அவர்களை வாய்க்கு வந்தபடி திட்டி மிரட்டுகிறார். உள்ளும்புறமும் ஒரே மாதிரியாக செயல்பட முடியாத அரசியல்வாதிகள் இது போன்ற சிக்கலான பிரச்சனைகளில் வாயை மூடிக் கொண்டிருப்பதே உத்தமம்.
தங்கள் பிள்ளைகளுக்கு எத்தகைய கல்விளை அளிக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை பெற்றவர்களுக்கு மட்டுமே உண்டு. அதில் வரம்பு மீறி தலையிடும் அதிகாரம் எந்த அரசியல் வாதிக்கும் கிடையாது.
அத்தியவசிய தேவைகளைப் பூர்த்தி செய்து ஒரு நல்ல நிர்வாகத்தை ஆளுங்கட்சி கொடுக்க வேண்டும். தவறும்போது அதை தட்டிக் கேட்டு, சரியான பாதையில் ஆங்கட்சி செல்ல எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்டபு தரவேண்டும், எனட்பதற் காகத்தான் தேர்லில் மக்கள் ஓட்டுப்போடுகின்றனர். பொது மக்களின் தனிப்பட்ட உரிமைகளில் மூக்கை நுழைக்க இவர்களுக்கு யாரும் அதிகாரம் அளிக்க வில்லை.
கல்தோன்றி மண் தோன்றாக் காலத்து முன்தோன்றிய மூத்த மொழி தமிழ். கருணாநி, ராமதாஸ் ஆகியோருக்கு முன்பும் நிலைத்து நின்றது.இவர்களுக்குப் பின்னரும் நிலைத்து நிற்கும் தகுதி வாய்ந்தது. மக்களை ஏமாற்றும் போலி அரசியல்வாதிகள் வந்து காப்பாற்றும் நிலையில், அவசர சிகிச்சைப் பிரிவில் மூச்சுத்திணறிக் கொண்டிருக்கவில்லை தமிழ் மொழி. மக்கள் உரிமைகளில் வரம்பு மீறி தலையிடுவதை இவரகள் தவிர்க்க வேண்டும்.
இந்த செய்தி 9-8-05 தினமலரில் சகோதரி -பிகதீஸ்பரி ராஜப்பன் கங்காதரபுரம், அறந்தாங்கி எழுதியிருந்தார் நன்றாக இருந்தது அன்று இந்தி என்ற மாயத்தோற்றத்தைக் காட்டி ஓட்டுகளை விலைக்கு வாங்கியது போல் ராமதாசும் முயல்கின்றார் வேறு ஒன்றம் இல்லை. நானும் ஏற்கவே எனத கருத்தையும் கூறியுள்ளேன்.
அன்று கருணாநி கேட்டார் ,"காங்கிரஸ் என்ன நேரு வீட்டு பரம்பரை சொத்தா" என்று இன்று ??