அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

தேசப்பிதா

மாலை மணி 4. 30 கடைசி உணவை ஆபா உள்ளே கொண்டு வந்தாள் . இந்த உணவுக்குப் பிறகு வேறு உணவை அவர் உண்ணப் போவதில்லை. ஆட்டுப் பால், சமைத்வையும் , பச்சையுமான காய் கறிகள், ஆரஞ்சுப் பழங்கள், ஒரு பச்சடி இவைதான் அந்த உணவு எலுமிச்சம் பழம், வடித்த வெண்ணெய், இஞ்சி, கற்றாழைச் சாறு இவற்றின் கலவை அந்தப் பச்சடி. புது டில்லியில் பிர்லா மாளிகையின் பின்புறம் உள்ள தமது அறையில் காந்தி உட்கார்ந்திருந்தார். இந்த உணவை அருந்திக் கொண்டே, சுதந்திர இந்தியாவின் புதிய சர்ககாரில் உதவிப் பிரதம மந்திரியான சர்தார் வல்லப் பாய் படேலுடன் அவர் பேசிச்கொண்ருந்தார். படேலின் மகளும் காரியதரிசியுமான மணிபென் கூட இருந்தாள். நடந்த சம்பாஷணை மிகவும் முக்கியமானது. படேல், பிரதம மந்திரி ஜவஹர்லால் நேரு இந்த இரண்டு பேருக்கும் இடையே மணஸ்தாபம் ஏற்பட்டிருப்பதாக வதந்திகள் உலவின . வேறு எத்தனையோ விவகாரங்களைப் போலவே இந்த விவகாரத்தையும் மகாத்மாவின் காதில் போட்டிருந்தார்கள்.

காந்தியும் படேலும் அவருடைய பெண்ணும் மட்டும் தனியே இருப்பதைக் கண்ட ஆபா, தான் குறுக்கிடச் சற்றுத் தயங்கினாள். ஆனாலும் காந்திக்கு எதுவும் நேரந் தவறக்கூடாது. இது அவளுககுத் தெரியும். எனவே, கடைசியில், மகாத்மாவின்நிகல் முலாம் புசிய கைக் கடிகாரத்தை எடுத்து வெரிடம் காட்டினாள். "நான் உடனே கிளம்பியக வேண்டும்" என்று சொல்லிக் காந்தி எழுந்தார். பக்கத்துச் சிற்றறைக்குச் சென்று விட்டு, மாளிகையின் இடது பக்கத்துப் பெரிய தோட்டத்தில் உள்ள பிரார்த்தனை மைதானத்தை நேக்கிப் புறப்பட்டார். மகாத்மாவுடைய பங்காளியின் பேனான கனு காந்தியின் இளம் மனைவி ஆபா. மற்றோரு பங்காளியின் பேத்தி மனு. இந்த இரண்டு பேரும் அவருடன் சென்றார்கள். இந்த இரண்டு பேருடைய தோள்கள் மீதும் அவர் கைகளைச் சார்த்திக் கொண்டார். "இவர்கள் தான் நான் நடக்க உதவும் ஊன்று கோல்கள்" என்று காந்தி சொல்வார்.
வரிசையாகத் தூண்கள் நிற்கும் நீளமான செம்பாறாங்கல் மண்டபப் பாதையில் இரண்டு நிமிஷ நேரம் நடந்து, பிரார்த்தனை மைதானத்துகுச் செல்ல வேண்டும. தினந்தோறும் இந்த இரண்டு நிமிஷ நேரத்திலும் காந்தி தம் தொல்லைகளை யெல்லாம் மறந்து தாமாஷகப் பேசுவார். அன்று ஆபா கொண்டுவந்து கொடுத்தகாரட் கீரைச் சாறு பற்றிக் கிண்டல் செய்தார்.
" ஆகவே நீ எனக்கு மாட்டுத் தீனியைக் கொடுத்து விட்டாய்" என்று சொல்லி அவர் சிரித்தார்.
" இல்லை, இது குதிரைத் தீனி என்றல்லவா பா சொல்லுவார்கள்" என்று ஆபா பதிலளித்தாள். பா என்று அவள் குறிப்பிட்டது காந்தியின் காலஞ்சென்ற மனைவியை.
"வேறு யாருக்கும் பிடிக்காததை நான் சுவைத்துச் சாப்பிடு வதால், நான் எவ்வளவு பெரியவன்?" என்று கேலியாகச் சொன்னார் காந்தி.
"பாபு(அப்பா), உங்கள் கைக் கடிகாரம் அநாதையாகி விட்டது போல் அழுதுகொண்டிருக்கும் அதை இன்று நீங்கள் பார்க்வேயில்லை" என்றாள் ஆபா.
"அதை ஏன் நான் பார்க்க வேண்டும்? நேரத்தைக் கவனித்துக் கொள்ளும் கணக்குப் பிள்ளைகள் தான் எனக்கு இருக்கிறார்களே!" என்று பட்டென்று பதிலளித்தார் காந்தி.
" அந்தக் கணக்குப் பிள்ளைகளையுந்தான் நீங்கள் ஏறெடுத்துப் பார்க்கவில்லை" என்று மனு குறிப்பிட்டாள். காந்தி மறுபடியும் சிரித்தார்.
இந்த நேரத்தில் மைதானத்துக்கு அருகே உள்ள புல்தரையில் அவர் நடந்துகொண்டிருந்தார். தினந்தோறும்மாலையில் நடக்கும் பிரார்த்தனைக்காகச் சுமார் ஐந்நூறு பேர்கள் கூடியிருந்தார்கள் . " இன்று பத்து நிமிஷம் தாமதித்துவிட்டேன். இப்படித் தாமதிப்பது என்றாலே எனக்குக் கொஞ்சமும் பிடிக்காது. ஐந்து மணி அடிக்கும் போது இங்கே நான் கணக்காய் வந்திருக்க வேண்டும்" என்று தமக்குத் தாமே பேசுவது போல் காந்தி உரக்கச் சொன்னார்.
பிரார்ததனை மேட்டுக்கு ஐந்து சிறுபடிகள் இருந்தன. அவற்றை அவர் வேகமாகக் கடந்தார். மர மேடைக்கு இன்னும்சில கஜ தூரம் தான் இருக்கும். பிரார்த்தனை நடக்கும் போது அந்த மர மேடையிலேயே அவர் உட்கார்ந்திருப்பார். கூட்டத்தில் இருந்தவர்களில் பெரும்பபாலோரும் எழுந்துநின்றார்கள். பலர் முன்னே நகர்ந்து வந்தார்கள். சிலர் அவருக்காகச் சந்தில் வழி விலக்கி விட்டுக் கொண்டிருந்தார்கள். அவருக்கு மிக அருகே இருந்தவர்கள் அவருடைய பாதத்தைத் தொட்டு வணங்கினார்கள். ஆபா, மனு இருவருடைய தோள்களிலுமிருந்து கைகளை எடுத்துக் குவித்து, ஹிந்து முறையில் காந்தி எல்லாருக்கும் வணக்கம் செலுத்தினார்.
அப்போது ஒரு மனிதன், முழங்கையால் இடித்துத் தள்ளிக் கொண்டு கூட்டத்திலிருந்து சந்துக்குள் வந்து சேர்ந்தான். வழக்கப்படி காந்தியின் பாதத்தில் விழுந்து வணங்க விரும்பிய ஒரு பக்தன் மாதிரி அவன் தோன்றினான். ஆனால் தாங்கள் நேரம் கடந்து விட்டதால், அவனை மனு தடுத்து நிறுத்த முயன்றால்: அவனுடைய கையைப் பிடித்துக்கொண்டாள். ஆனால், அவனோ அவளை உதறி ஒரு புறம் தள்ளினான். அவள் உருட்டியடித்துக்கொண்டு போய் விழுந்தாள். காந்திக்கு எதிரே இரண்டடி தூரம்.......
காந்திக்கு எதிரே இரண்டடி தூரத்தில் அந்த மணிதன் வந்து நின்று கொண்டான். சிறிய ஆட்டோமாட்டிக் பிஸ்டல் ஒன்றால் மூன்று முறை சுட்டான்.
முதல் குண்டு பாய்ந்தது; இயங்கிக் கொண்டிருந்த காந்தியின் கால் தரையில் பதிந்தது. ஆயினும் அவர் நின்று கொண்டே யிருந்தார். இரண்டாவது குண்டு பாய்ந்தது; ரத்தம் பீரிட்டுக் காந்தியின் வெண்மையான துணிகளைக் கறைப்படுத்தத் தொடங்கியது. அவருடைய முகம் சாம்பலென வெளிறிட்டது. கூப்பியகைகள் மெல்லத் தளர்ந்து தொங்கின. ஒரு புஜம் மட்டும் கணநேரம் ஆஷாவின் கழுத்தில் பதிந்திருந்தது.
"ஹே ராமா!"என்று காந்தி முணுமுணுத்தார். முன்றாவது குண்டு வெடித்தது வெளிவந்தது. துவண்ட உடல் தரையிலே படிந்து விட்டது. அவருடைய மூக்குக் கண்ணாடி மண்ணிலே விழுந்தது. பாதரட்சைள் பதங்களை விட்டு நழுவிக் கழன்றன.
ஆபா, மனு இரண்டுபேரும் காந்தியின் தலையைப் பிடித்து நிமிர்த்தினார்கள். அன்புக் கரங்கள் அவரைத் தரையில் இருந்து தூக்கி, பிர்லா மாளிகைக்குள் அவருடைய அறையில் கொண்டு போய்ச் சேர்த்தன.

Labels:

பி. இரத்தினவேலு தேவர்

திருச்சிராப்பள்ளி நகர வளர்ச்சிக்கு வித்திட்ட பெரியோர்கள் பலரில் நகராட்சித் தலைவராயிருந்த பி. இரத்தினவேல் தேவர் அவர்கள் முதன்மையானவர். 1883 ஆம் ஆண்டு பிராச்சிலையில் பிறந்தவர். இளம் வயதிலேயே தந்தையாரை இழந்தவர். எஸ்.பி.ஜி. பள்ளியிலும் பின்னர் சென்னை கிறித்துவக் கல்லூரியிலும் கல்வி கற்றார்.

பொது வாழ்க்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட தேவர் 1924 ஆம் ஆண்டு நீதிக்கட்சி வேட்பாளராகத் திருச்சிராப்பள்ளி நகரமன்ற உறுப்பினருக்குப் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். பின்னர் நகரமன்றத் தலைவராகப் போட்டியின்றி தேர்ந் தெடுக் கப்பட்டார். 1924இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1924முதல் 1946 வரை 4 முறை நகராட்சித் தலைவர் பொறுப்பேற்று நகர வளர்ச்சிக்கு அரும்பணியாற்றினார். 1946இல் நடைபெற்ற தேர்தலில் சென்னை மாநில சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தேவர், பிற்காலத்தில் நீதிக்கட்சியோடு கருத்து வேறுபாடு கொண்டார். திலகரும், காந்தியாரும் விடுத்த அழைப்பை ஏற்று காங்கிரஸ் பேரியக்கத்தில் இணைந்தார். காந்தியடிகளின் போதனைகளை மக்களிடம் பரப்பினார். நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டார். அதனால் பலமுறை சிறைவாசமும் அனுபவித்தார். ராஜாஜி மன்றும் பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் அன்புக்குப் பாத்திரராகவும் இருந்தார்.

இரத்தினவேல் தேவர், நகரமன்றத் தலைவராகப் பணியாற்றியபோது கம்பரசம் பேட்டையில் இருந்து நீரேற்று நிலையத்தை நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்பத்தி தனது சொந்த செலவில் விரிவாக்கம் செய்தார். அன்றைய மாகாண அரசின் நிதி இலாகா, தேவரின் செயலைக் கண்டித்து இவருக்குத் தாக்கீது அனுப்பியது. இதனை எதிர்த்து இலண்டன் பாராளுமன்றத்திற்குத் தேவர் முறையீடு செய்தார் லண்டன் பாராளுமன்றம் இவரது முயற்சியைப் பாராட்டி நற்சான்றிதழ் வழங்கியது. பத்திரிக்கைகளின் மூலம் இச்செய்தியினை அறிந்த மகாத்மாகாந்தி அடிகள் தேவரைப் பாராட்டிக் கடிதம் எழுதினார். திருச்சிராப்பள்ளிக்கு வந்த ஜவஹர்லால் நேரு இவரது இல்லம் வந்து உணவருந்திப் பாராட்டினார்.

திருச்சிராப்பள்ளி நகரக் கூட்டுறவு பண்டக சாலையின் தலைவராகவும், அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும், தேசியக் கல்லூரி நிரவாகக் குழுத் தலைவராகவும், இலங்கை தமிழர் யூனியன் கிரிக்கெட்குழுத் தலைவராகவும் சிறப்பாகச் செயல்பட்டார். இரத்தினவேல் தேவர் சிறந்த கிரிக்கெட் வீரர். திருச்சிராப்பள்ளியில் கிரிக்கெட் குழு அக்காலத்திலேயே இலங்கை சென்று பெரும் புகழ்பெற்றது. நகரின் குடிநீர்ப் பிரச்சினையைப் பெரிதும் தீர்த்தவர் தேவர்.10-6-48 இவர் இயற்கை எய்தினார்.

இவரது பெயரில் தான் தேவர்ஹால் உள்ளது அந்த இடம் தேவருக்குச் சொந்தமாகும்

மாநகராட்சிஅலுவலகம் உள்ள இடமும் இவருக்குச் சொந்தமானது சிந்தாமனி விற்பனைக்கூடமும் இவருக்குச் சொந்தமானது இலங்கை அமைச்சர் தொண்டைமான் இவருக்கு உறவினராவார் பசும்பொன் தேவர் திருமகனாரும் இவரது இல்லத்தில் கொஞ்சநாள் இருந்தார் காந்தியடிகள் தன் கையால் நூற்ற சேலை ஒன்றை இவருக்களித்தார்.

இன்று இவரது உருவச் சிலையை தமிழக முதல்வர் திறந்து வைக்கிறார். அதற்கு நன்றியும் பாராட்டும் தெரிவிப்போம்.