அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

ஒகேனக்கல் பகுதியில்,

சென்னை, செப்.29: ஒகேனக்கல் பகுதியில், அருவி அருகில் கைப்பிடி கம்பிகள் அமைக்கப்படும் இடம் தமிழகத்துக்குதான் சொந்தம் என்பது மத்தியக் குழு மேற்பார்வையில் நடக்க உள்ள கூட்டு நில அளவையின்போது நிரூபிக்கப்படும் என்றார் முதல்வர் ஜெயலலிதா.

நடப்பு நிதியாண்டுக்கான முதல் துணை நிதிநிலை அறிக்கை மீது ஹேமச்சந்திரன் (மார்க்சிஸ்ட்) புதன்கிழமை பேசியபோது, பக்கத்து மாநிலங்களுடன் தமிழக அரசு சுமுக உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

அப்போது முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:

பக்கத்து மாநிலங்களுடன் எப்போதும் தமிழகம் பிரச்சினை செய்வதில்லை. காவிரிப் பிரச்சினையைப் பொருத்தவரை தமிழகத்தின் மீது எந்தத் தவறும் கிடையாது. ஆற்றில் தண்ணீர் திறந்துவிட கர்நாடகம் தொடர்ந்து மறுத்து வருகிறது. எனவே, நீதிமன்றத்துக்குப் போகிறோம்.

அதேபோல கிருஷ்ணா நீர் திட்டத்தில் சென்னைக்கு ஆண்டுக்கு 12 டி.எம்.சி. தண்ணீரை ஆந்திரம் தர வேண்டும் என எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஆனால், அதன்படி தண்ணீர் தருவதில்லை. அதை திரும்பத் திரும்பக் கேட்டு வருகிறோம். யாருடனும் தமிழகம் சண்டை செய்வதில்லை.

ஒகேனக்கல் பிரச்சினை ஏன் ஏற்பட்டது என்றே தெரியவில்லை.

மத்திய அரசு வெளியிட்ட வரைபடத்தைதான் அனைத்து மாநிலங்களும் பின்பற்றுகின்றன. தற்போது கைப்பிடி அமைக்கும் பகுதி தமிழகத்திற்குச் சொந்தமானது என்று அந்த வரைபடத்தில் காட்டப்பட்டுள்ளது. எத்தனையோ ஆண்டுகளாக அது தமிழகத்தின் பயன்பாட்டில்தான் இருந்து வருகிறது. திடீரென கர்நாடகம் அதுபற்றி பிரச்சினை எழுப்புகிறது. அது தமிழகத்திற்குச் சொந்தமான பகுதி என்பதை திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறேன் என்றார் முதல்வர்.
தினமணி செய்தி
இது சம்பந்தமாக எந்த இயக்கமும் வாய்திறக்கக் காணோம் தேவையில்லாமல் கர்னாடக மக்கள் வருகிறார்களா? அல்லது நாம் அவர்கள் இடத்தில் பாது காப்பு கம்பி வைக்கிறோமா? தனிநபர் குஷ்பு விவகாரத்திற்கு இருந்த வேகம் இதற்கு இல்லை அதற்காக குஷ்புவை கண்டிக்க வேண்டாம் என நான் சொல்ல வில்லை இதையும் கண்டிக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள்.

`எய்ட்ஸ்' நோயாளி குணமடைந்து விடுவான்.





மாத்தூர் அருகே 400 ஆண்டு பழமையான சகல வினை தீர்க்கும் சஞ்சீவிராயர் கோவில்கல்லிலே கலைவண்ணம் கண்டவர்கள் நமது முன்னோர்கள். கடவுள் மேல் உள்ள பக்தியாலும் ஆன்மீகத்தை வளர்க்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தாலும் அரசர்கள் நமதுநாடு முழுவதும் ஆயிரக்கணக்கான கோவில்களை கட்டினர்.
வரலாற்று சுவடுகளில் நாம் பின்னோக்கி செல்லும் போதுதான் அந்த கோவிலின் பின்னணியும் நமக்கு தெரிய வருகிறது. சில கோவில்கள் இன்று சுவடுகள் கூட இல்லாமல் அழிந்த நிலையில் இருந்து வருகின்றன. ஆனால் சில கோவில்கள் ஆன்மீகவாதிகளால்புதுப்பிக்கப்பட்டு கால சுழற்சிக்கு ஈடுகொடுத்து தனது ஆயுட்காலத்தை நீடித்து கொள்கிறது.

சில கோவில்கள் பெருமைகளும் அரிய பல ஆதாரங்களையும் பெற்றிருப்பினும் மக்களிடையே அந்த கோவிலின் தொன்மை சென்றடைவது இல்லை. அப்படி ஒரு கோவிலின் வரலாற்றை இப்போது நாம் காணலாம்.
திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில் ஆவூர் செல்லும் சாலை மாத்தூர் பகுதியில் பிரிகிறது. இந்த கிளை சாலை வழியே 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது சஞ்சீவிராயர் கோவில். மாத்தூர் ஊராட்சி ராசிபுரம் கிராமத்தைச் சேர்ந்த 400 ஆண்டு பழமை வாய்ந்த இந்த கோவிலில் அனுமார் மூலவராக வீற்றிருக்கிறார். இந்த கோவிலின் வரலாற்றை பார்ப்பதற்கு முன் சஞ்சீவி ராயர் என ஏன் அனுமனை அழைக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
சீதையை மீட்க இலங்கை சென்ற ராமனும், லட்சுமணனும் ராவணனோடு போரிடுகிறார்கள். அப்போது நாக பாசனம் கலந்த அம்பை ராவணன் லட்சுமணன் மீது எய்து விடுகிறான். இதில் பாதிக்கப்பட்ட லட்சுமணன் நோய்வாய்ப்படுகிறான். அந்த நாகபாசனத்தில் இருந்து லட்சுமணனை மீட்க ஒரு மூலிகை செடியின் இலையால்தான் முடியும் என சித்தர்கள் கூற அந்த மூலிகை செடி எங்கே இருக்கிறது என ராமன் கேட்கிறார்.
அதற்கு சித்தர்கள் அந்த மூலிகை செடி இமயமலை பகுதியில் உள்ள சஞ்சீவி மலையில்தான் உள்ளது என கூறினர். உடனே ராமன் அருகில் இருந்த அனுமார் நான் அந்த செடியை எடுத்து வருகிறேன் எனக்கூறி புறப்படுகிறார். அவ்வாறே அவர் சஞ்சீவி மலை செல்கிறார். ஆனால் அங்கு அவர் பறித்து வர வேண்டிய மூலிகை செடி எது என்று அவருக்கு தொìயவில்லை. லட்சக்கணக்கான மூலிகை செடிகள் கொண்ட அந்த மலையில் தனக்கு தேவையான செடியை எப்படி தேடுவது? என யோசிக்கிறார்.
உடனே அவருக்கு ஒரு எண்ணம் தோன்றியது. மலையையே எடுத்துச் சென்று விட்டால் அங்கு சித்தர்கள் தங்களுக்கு தேவையான செடியைபறித்து கொள்வார்கள் என நினைக்கிறார். அதன்படி அவர் மலையை ஒரு கையில் ஏந்தியபடி எடுத்து கொண்டு வருகிறார். அங்கு சித்தர்கள் மூலிகை செடியை பறித்து லட்சுமணனுக்கு கொடுத்து அவரது உயிரையும் காப்பாற்றி விடுகிறார்கள். சஞ்சீவி மலையை தூக்கி சென்றதால் அனுமார் சஞ்சீவிராயர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த கதைக்கும் மாத்தூர் அருகே உள்ள சங்சீவிராயர் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் என்பதை இனி பார்ப்போம்.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த விராலிமலை ஒனறிய பகுதி அந்த காலத்தில் கிஷ்கிந்தாபுரம் என அழைக்கப்பட்டு வந்தது. இந்த கிஷ்கிந்தாபுரம் வனங்கள் நிறைந்த பகுதியாக இருந்தது. ராமபிரான் உத்தரவுப்படி அனுமார் சஞ்சீவி மலையை எடுத்துக் கொண்டு செல்லும் போது அவருக்கு அசதி ஏற்பட்டது. தனது அசதியை போக்க அவர் கிஷ்கிந்தா புரத்தில் மலையை சிறிது நேரம் இறக்கி வைத்து விட்டு தங்கினார். பின்னர் இங்கிருந்து புறப்பட்டு சென்றதாக புராணம் கூறுகிறது. அப்படி அனுமார் ஓய்வெடுத்த இடம்தான் தற்போது உள்ள சஞ்சீவிராயர் கோவில் பகுதியாகும். அப்போது அங்கு கோவில் எதுவும் எழுப்பப்படவில்லை.
பின்னர் நீண்ட நாட்கள் கழித்துதான் அந்த அதிசயம் நிகழ்ந்தது.
ராசிபுரம் கிராமத்தைச் சேர்ந்த சில சிறுவர்கள் தினமும் ஆடுகளை மேய்த்துக் கொண்டு தற்போது இருக்கும் சஞ்சீவிராயர் கோவில் பகுதிக்கு வந்து செல்வது வழக்கம். ஒரு ஆடு மட்டும் அடிக்கடி ஒரு அடர்ந்த புதருக்குள் சென்று விட்டு நீண்ட நேரம் கழித்து வந்தது. 2, 3 நாட்கள் இதனை கண்காணித்த சிறுவர்கள் ஆடு எங்கே செல்கிறது என்பதை பார்க்க ஒருமுறை ஆட்டை பின் தொடர்ந்தனர். அப்போதுதான்அந்த அரிய காட்சியை அவர்கள் பார்த்தனர்.
அங்கு புதரின் மறைவில் ஒரு அனுமார் சிலை இருந்தது. சிலையின் வாய் பகுதியில் ஆடு தனது மடியில் இருந்துபாலை சுரந்து கொண்டிருந்தது. அந்த பாலும் கீழே சிதறவில்லை. இதனை பார்த்த சிறுவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். அப்போது சிறுவர்களில் ஒருவருக்கு அனுமார் காட்சி தந்து தனக்கு இங்கு கோவில் அமைத்து வழிபடுமாறு கூறினார். இதனை அந்த சிறுவன் தனது பெற்றோரிடம் கூறினான். அதன் பிறகு அங்கே சிறிய அளவில் கோவில் கட்டப்பட்டு வழிபட தொடங்கினர். அந்த சிறுவனின் பரம்பரையினரே இன்றும் அறங்காவலர்களாக உள்ளனர்.
ஆனாலும் இந்த கோவிலின் பெருமை பக்கத்து ஊருக்கு கூட தெரியாமல் இருந்து வந்தது.
புதுக்கோட்டை சமஸ்தானத்தை 1726-ல் ராஜவிஜய ரகுநாதராயபாதர் தொண்டைமான் என்பவர் ஆட்சி செய்தார். அவருக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை. ஒரு முறை அவர் சஞ்சீவி ராயர் கோவில் இருக்கும் பகுதிக்கு வந்தார். அவர் கோவிலுக்கு சென்று வழிபட்டார்.
கோவில் அர்ச்சகர் ஒரு பச்சிலையை அனுமாருக்கு பூஜை செய்து விட்டு அரசனிடம் கொடுத்தார். இந்த பச்சிலை மூலிகை செடியில் இருந்து பறிக்கப்பட்டது. இதனை அரைத்து நீங்களும் உங்கள் துணைவியாரும் சாப்பிடுங்கள். சில நாளில் உங்கள் மனைவி கருவுற்று குழந்தை பெறுவார் என கூறினார்.
முதலில் இதனை நம்ப மறுத்த அரசர் எதற்கும் சாப்பிட்டு பார்ப்போமே என நினைத்து வாங்கி சென்றார். அந்த பச்சிலையை சாப்பிட்ட 13 நாளில்அரசனின் துணைவியார் கருவுற்றார். மன்னருக்கு வாரிசும் பிறந்தது. இதனால் அளவற்ற மகிழ்ச்சி அடைந்த அவர் இந்த கோவிலுக்கு 500-க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.
கோவிலையும் பெரியதாக்கி கட்டி கொடுத்தார். அதன்பிறகே இந்த கோவிலின் பெருமையை உலகம் அறிய தொடங்கியது.
பின்னர் பலர் செய்த நிதி உதவியால் கோவில் மண்டப பகுதி 1969-ல் முழுமை பெற்றது. ஆனாலும் பல தடைகளால் கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்து வந்தது. அந்த தடைகளையும் கடந்து கடந்த 2000-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தேறியது.
தற்போது இந்த கோவிலை நாராயணசாமி தாசர் மகன் சீனிவாசன், சஞ்சீவிநாயுடுவின் மகன்கள் கோவிந்த ராஜன், ரெங்கராஜன், சுந்தர்ராஜன், வரதராஜன் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். சீனிவாசன் அர்ச்சகராக பணியாற்றி வருகிறார்.
ஆண்டுதோறும் சித்திரை அல்லது வைகாசியில் வரும் மூல நட்சத்திரத்தில் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இந்த விழாவில் வெளிநாடுகளில் இருந்தும், வெளி மாநிலங்களில் இருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளிலும், மார்கழி மாதம் அனுமார் ஜெயந்தியும் மற்ற முக்கிய நாட்களில் வழக்கமான அராதனைகளும் இங்கு நடைபெறுகிறது.
இந்த கோவிலின் சிறப்பு என்ன? அரிய பொக்கிஷமாக இந்த கோவில் இருந்தும் இன்னும் பலர் அறியப்படாத அளவில் இருப்பதற்கு என்ன காரணம்? என்பது குறித்து கோவில் அர்ச்சகர் சீனி வாசன் கூறியதாவது:-
உலகில் உள்ள அனுமார் கோவில்களில் தேர் உள்ள அனுமார்கோவில்களைவிரல் விட்டு எணணிவிடலாம். அவற்றில் இந்த கோவிலும் ஒன்று. மேலும் வேறு எந்த அனுமார் கோவிலுக்கும் இல் லாத ஒரு சிறப்பு இங்கு அரிய வகை மூலிகை செடிகள் இருப்பதுதான் சஞ்சீவிமலை இங்கு இறக்கி வைக்கப்பட்ட தால்தான் இந்தமூலிகை செடி கள் இங்கு வளர்ந்து வருகிறது. இந்த மூலிகை செடிகள் மூலம் பல பக்தர்களின் நோய் களுக்கு நாங்கள் மருந்து கொடுக்கிறோம். இது வியா பார நோக்கில் அல்ல. அனுமனை வேண்டி வரும் பக்தர்களுக்கு அணுவளவும் உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ பிரச்சினை கள் வரக்கூடாது என்ற நோக் கத்தில்தான் சில மூலிகை மருந்துகளை நாங்களே தயார் செய்து தருகிறோம். சில நோய் களுக்கு மூலிகை செடிகளை தருகிறோம். அவர்கள் எடுத்து சென்று அரைத்து பொடி செய்து சாப்பிடுகிறார்கள்.
குழந்தை பாக்கியம் பெற மூலிகை மருந்து தருகிறோம். பலர் இந்த மருந்தினை வாங்கி சென்று சாப்பிட்டு குழந்தை பாக்கியம் பெற்றி ருக்கிறார்கள். அதைபோல் மூட்டு வலி வந்தவர்கள் இங்கு வந்தால் அவர்கள் காலில் மூலிகை செடி பறித்து சாறை தடவி சென்றால் மூட்டு வலி சரி செய்து நலமாகிறார்கள்.
இன்னும் சொல்லப் போனால் தற்போது `எய்ட்ஸ்' என்று சொல்லப்படும் பால் வினை நோய் தீரவும் இங்கு உள்ள மூலிகை செடிகளின் சாறை பயன்படுத்தி அவர் களை குணமாக்க மடியும். அதற்கு 120 மூலிகை செடி களின் சாற்றினை ஒன்றாக கலந்து சாப்பிட வேண்டும்.
அவ்வாறு சாப்பிட்டு வந்தால் `எயட்ஸ்' நோயாளி குணமடைந்து விடுவான். மேலும் ஆண்மை குறைபாடு உள்ள ஆண்களுக்கு இங் குள்ள ஒரு மூலிகை செடியின் சாற்றை கொடுத்தால் அவர் களுக்கு அதற்கு பிறகு அந்த பிரச்சினை இருக்காது. மாத விடாய் கோளாறில் பாதிக்கப் படும் பெண்களுக்கும் அந்த பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க இங்கு மூலிகை இலைகள் இருக்கிறது. இங் கிருந்து பலர் மூலிகை செடி களை பறித்து சென்று மூலிகை மருந்தாக தயாரித்து வற்பனை செய்கிறார்கள். இந்த மூலிகை செடிகளை பறித்து செல்ல கோவிலுக்கு என ஒரு தொகை செலுத்தி விடுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்
நன்றி மாலை மலர்

ராமதாஸின் போராட்டம்

இன்று இரவு சன் செய்தியில் உயிரக்கொடுத்தாவது தமிழைக் காப்பாராம் மருத்தவர் ராமதாஸ்
முதலில் தமது மகனை வேட்டி கட்டச்சொல்லுங்கள் முழுகால் ட்ரவுசரை கழற்றச்சொல்லுங்கள் ஏன் தமிழை யாராவது திருடிச்செல்லுகிறார்களா?
தமிழுக்கு எங்கு ஆபத்து வந்தது.

விஜயகாந் பேட்டி (குமுதம்)

தொப்புளில் பம்பரம் விட்டவர்’ என்றெல்லாம், திருமாவளவன் உங்களை விமர்சனம் செய்திருக்கிறாரே?

‘‘அவருக்கெல்லாம் நான் பதில் சொல்லிக்கொண்டு என் நேரத்தை வீணடிக்கத் தயாராக இல்லை.

எனது அரசியல் பிரவேசத்திற்குப் பிறகு, எனது கேள்விகளுக்கு, அவர் பதில் சொல்லத் தயாராக இருப்பாரா என்று பார்க்கலாம்.

இப்போது, கலைஞனான என்னை, சிலர் அரசியல்வாதியாக இருந்துகொண்டு, விமர்சனம் செய்வதற்கெல்லாம் கோபப்பட்டால், நான் அரசியல் வாழ்விற்குத் தகுதியில்லாதவனாகி விடுவேன். பக்குவம் அடைந்த என் பாதையும், பார்வையும் தெளிவாக இருக்கிறது. என்னை யாரும் சீண்டிப் பார்க்க வேண்டாம். அது முடியவும் முடியாது.’’
கட்சிக்கு என்ன பெயர் வைப்பது என்று முடிவெடுத்து விட்டீர்களா?

‘‘நிஜமாகவே இன்னும் பெயர் என்னவென்று தீர்மானிக்கவில்லை. மக்கள் மனதில் பதியும் விதமான பெயரைத் தேர்ந்தெடுத்துக்கொண்டே இருக்கிறேன். மாநாட்டு மேடையேறிப் பேச ஆரம்பிக்கும் வரை, யோசிக்க வேண்டிய விஷயங்களில் இதுவும் ஒன்றாக இருக்கிறது.’’

மாநாட்டில் என்ன பேசுவது என்றாவது தீர்மானித்து விட்டீர்களா?

‘‘உண்மையைச் சொல்லப் போனால், இது பற்றியும் இன்னும் யோசிக்கவில்லை. ஆனால், நாடு முழுவதுமிருந்து வந்து கூடும் தொண்டர்கள் மத்தியில், இரண்டு மணி நேரம் பேசுவதற்குரிய விஷயத்தையெல்லாம், அசை போட்டுக் கொண்டுதான் இருக்கிறேன். என்ன மாதிரியான சமாசாரங்களைப் பேசப் போகிறேன் என்று இப்போதே சொன்னால் ‘கிக்’ போய்விடும்.’’

இன்றைய முன்னணித் தலைவர்கள் மாதிரி, உங்களுக்கான மேடைப்பேச்சை எழுதித் தருவதற்கென்று, யாரையாவது நியமித்துள்ளீர்களா?

‘‘இதுவரை யாரையும் அப்படி நியமிக்கவில்லை. நாளாவட்டத்தில், அதற்குத் தேவைப்படும்போது பார்த்துக் கொள்ளலாம். இப்போதைக்கு மக்களை நோக்கி, மக்களின் பிரச்னையை, மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் பேசுவதற்கு, எனக்கே தெரியும். காரணம், நானும் இந்த மக்களில் ஒருவன்தானே!’’

யாரிடமும் நன்கொடை வாங்காமல், முதல் மாநாட்டை நடத்துகிறீர்கள். இந்தச் செலவுகளுக்கான கணக்கு வழக்குகளைப் பராமரித்து வருகிறீர்களா?

‘‘ஒவ்வொரு பைசாவிற்கும் உண்மையான கணக்கெழுதி வருகிறேன். யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் எனது கணக்கு விவரங்களை ஆய்வு செய்யலாம். எனது சொந்த உழைப்பின் பணம் மட்டுமின்றி, என் தொண்டர்களின் பங்களிப்பும் இடம் பெற்றிருப்பதால், நாளை ஏதாவது ஒரு குழப்பமோ, கேள்வியோ வந்துவிடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறேன்.’’

முதல் மாநாட்டை யாரிடமும் நன்கொடை வாங்காமல் நடத்துவது போல, தொடர்ந்து நன்கொடை வாங்காமல், கட்சியை நடத்த முடியும் என்று நம்புகிறீர்களா? யாராவது விழா மேடையில் ஏறி, டொனேஷன் கொடுத்தால் வாங்கிக் கொள்வீர்களா?’’

‘‘அப்படிக் கொடுத்தால் வாங்கிக் கொள்வேன். ஆனாலும், அது நடக்காது என்று நம்புகிறேன். அதற்கான தேவையுமில்லை. இதுவரை, நானோ எனது மன்றத்து ஆட்களோ, ஒரு புக்கை அச்சடித்து வசூல் பண்ணியதாக யாராவது சொல்ல முடியுமா? என்னைப் போலவே என் மன்றத்தாரும் சொந்தச் செலவைச் செய்து, சொந்த உழைப்பைக் கொடுத்து வருகிறார்கள்.

பழைய அரசியல்வாதிகளைப்போல நானில்லை என்று நிரூபிக்கத்தான் பாடுபட்டு வருகிறேன். யாருடனும் என்னை ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். காசு கொடுத்தால்தான் கூட்டம் வரும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? என்னைப் பற்றியும், என் மன்றத் தொண்டர்களின் செயல்பாடுகளைப் பற்றியும் நானே பெருமையாகச் சொல்லிக் கொள்ளக்கூடாதுதான். என்றாலும், என் சொல்லை ‘லட்சுமணன் கோடு’ போல பாவித்து நடந்து கொள்கிறார்கள். அவர்களின் எண்ணத்தை, ஆசையை, எதிர்காலத்தை வளப்படுத்த என்ன செய்ய வேண்டுமோ, அதை மட்டும் யோசித்துச் செயல்பட்டு வருகிறேன்.

வருமானம் பண்ணுவதற்கு, எனக்கு அரசியல் தேவையில்லை. அதுதான் இலக்கு என்றால், இதுநாள் வரை நான், இந்தக் கலைத்துறையின் மூலம் சேர்த்த வருமானத்தைப் பாதுகாத்தாலே போதும். மக்களிடம் கற்காலம் பற்றிப் பேசவேண்டும் என்றோ, அவர்களிடம் ‘பதினேழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னன் ஆண்ட கதை’யைச் சொல்லி குழப்ப வேண்டும் என்றோ, நான் திட்டமிடவில்லை. உள்ளதை எடுத்துச் சொல்லி, அவர்களுக்கு நல்லதைச் செய்ய, என்னையே இழக்கத் தயாராகி வருகிறேன்.’’

மீண்டும் கேட்கிறோம்... மாநாட்டில் பேசப் போகும் உரையின் ஹைலைட் என்னவென்று ரகசியமாகவாவது சொல்லுங்களேன்...

‘‘ஐயய்யோ, சத்தியமா நான் எதையும் திட்டமிட்டு வந்து பேசப் போவதில்லை. பல விஷயங்களை யோசிச்சிக் கிட்டிருக்கேன். மாநாட்டுக்கு முதல்நாள் வரையில் மக்களைப் பாதித்த, மக்களில் ஒருவனான என்னைப் பாதித்த, விஷயங்கள் பற்றித்தான் பேசப் போகிறேன்.

அத்துடன், என்னை அரசியலுக்கு இழுத்து வந்த சூழ்நிலை பற்றியும் தெரிவிக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சமீபத்தில், என் சொத்து ஒன்றை விற்று அரசியலுக்குச் செலவிடுவதை எழுதியிருந்த நாளிதழ் ஒன்று ‘சின்ன மீனைப் போட்டுத்தானே பெரிய மீனைப்பிடிக்க வேண்டும்’ என்று கமெண்ட் அடித்திருந்ததையும் சுட்டிக்காட்டி, அதற்கும் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற யோசனையும் இருக்கிறது.

எந்தச் சின்ன மீனைப் போட்டு அவர்கள், அந்தப் பத்திரிகையை விலைக்கு வாங்கினார்கள் என்பதையும், எந்தச் சின்ன மீன் தயவில் டி.வி நிறுவனத்தை நடத்த ஆரம்பித்தார்கள் என்பதையும், புட்டுப்புட்டு வைக்கலாமென்றும், சிந்தனை செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த மாநாட்டைப் பொறுத்தவரை, எனக்கொரு பாடமாகவே எடுத்துக்கொள்கிறேன். படிப்பினை என்றும் சொல்லலாம். படிப்படியாக முன்னேறுவதற்கான முதல் முயற்சியில், சில தவறுகளும் நடக்கலாம்.’’

சில ஊர்களில் உங்கள் மன்றத்தினருக்கும், பிற கட்சியினருக்கும் மோதல் ஏற்படுவதாகச் செய்திகள் வருகிறதே?

‘‘அது இயல்புதானே? எந்தக் கட்சியாவது பிரச்னையில் மாட்டாமல் வளர்ச்சி அடைந்திருக்கிறதா? காங்கிரஸ் இயக்கமும் சரி, இங்குள்ள திராவிட இயக்கங்களும் சரி, ஆரம்பத்தில் பட்ட கஷ்டங்களைத்தானே, நாங்களும் சந்திக்கிறோம்.

என்னையும், என் மன்றத்து ஆட்களையும் பொறுத்த வரையில் வம்புச் சண்டைக்குப் போக மாட்டோம். வந்த சண்டையையும் வளர்க்க மாட்டோம்.’’

மாநாடு முடிந்ததும் தமிழகம் முழுவதும் சூறாவளிச் சுற்றுப் பயணம் போகப் போவதாகவும் குறிப்பாக, முதலில் ராமநாதபுரத்தில் முகாமிட்டு, பிரசாரத்தை முடுக்கி விடப் போவதாகவும் செய்திகள் வருகிறதே?

‘‘இது மட்டுமா வருகிறது? இஷ்டத்துக்கும் வதந்திகளைப் பரப்புகிறார்கள். ஆனாலும், சூறாவளிச் சுற்றுப் பயணம் போகப் போவது உண்மைதான். தலைவர் எம்.ஜி.ஆர். பயணம் செய்த பிரசார வேனில், வரலாமென்றும் திட்டமிருக்கிறது.

மாநாடு முடிந்ததும் நிர்வாகிகள், அமைப்பாளர்கள் அடங்கிய மனுவுடன் டெல்லி சென்று, கட்சியைப் பதிவு செய்ய வேண்டும். அதன்பின், மக்களிடம் எடுபடக் கூடிய பிரசார யுக்தியைக் கையிலெடுக்க வேண்டும். பிறகுதான், பயணத்திட்டத்தைச் செயல்படுத்தப் போகிறேன். ராமநாதபுரம் என்பதில்லை, தமிழகம் முழுக்க, திரும்பத் திரும்ப பயணம் செய்து, லட்சிய வெறியுடன் வெற்றியைத் தேடி, பிரசாரம் செய்யத்தானே போகிறேன். அப்போது தெரியும், இந்த விஜயகாந்த் யாரென்று? அதுவரை பொறுத்திருங்கள்.

மேற்கண் பேட்டியில் அரசியல் முதிர்ச்சி தெரிகிறது எனைப்பொருத்தவரை இதையே கைகொண்டால் முன்னுக்கு வருவார் சில்லுவண்டு தனமாக கண்டவர்களுக்கு பதில் சொல்லிக் கொண்டு இல்லாமல் தான் கொண்ட இலக்கையடையலாம். இவர்காட்டும் அண்ணாதுரையை தனிப்ட்ட முறையில் விமர்சித்து இருந்த போஸ்டருக்கு லைட்போடச்சொன்ன அண்ணாபோல். பெருந்தலைவரை தனிப்பட்டமுறையில் பேசியதற்கு அவர் அதைப்பற்றியே கண்டு கொள்ளாமல் இருந்ததைப்போல. இவரும் இருந்தால் முன்னுக்கு வரலாம் .

சதாம் உசேன் 1லட்சத்து 82ஆயிரம்பேரை கொன்றார்

ஈராக்கில் சதாம் உசேன் ஆட்சி அகற்றப்பட்டு அங்கு புதிய ஆட்சி நடக்கிறது. சதாம் ஆட்சி காலத்தில் நடந்த கொடு மைகள், இவர் செய்த படுகொலைகள் தொடர்பான வழக்கு விசாரணை அக்டோபர் 19-ந் தேதி தொடங்குகிறது.
இந்த வழக்கை விசாரிக்கும் நீதிபதி ஒருவர் சதாம் உசேன் இருக்கும் சிறைக்கு சென்று அவரிடம் ஒப்புதல் வாக்கு மூலம் வாங்கினார்.
அப்போது நீதிபதியிடம் சதாம் உசேன், எனது ஆட்சியில் 1 லட்சத்து 82 ஆயிரம் குர்திஷ் இன மக்களை கொன்று குவித்தேன். நூற்றுக்கணக்கான குர்து இன மக்கள் வசிக்கும் கிராமங்களை அழித்து விடவும் உத்தரவிட்டேன் என்று தெரிவித்தார்.
சதாம் உசேனிடம் ரகசிய வாக்கு மூலம் வாங்கிய நீதிபதியும் குர்து இனத்தை சேர்ந்தவர்தான்.
சதாம் உசேன் ரகசிய வாக்கு மூலம் அளித்ததை நீதிபதி அந்த நாட்டு அதிபர் ஜலால் தலாபானியிடம் தெரிவித்துள்ளார்.
சதாம் உசேன் நீதிபதியிடம் அளித்த வாக்கு மூலத்தை அதிபர் தலாபானி டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியிலும் தெரிவித்து விட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
சதாம் உசேன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.
அதிபர் தலாபானி கூறும்போது, சதாம் உசேன் இந்த நீதிபதியை கொல்ல 20 முறை முயற்சி செய்தார். ஆனால் அது நடைபெறவில்லை.
இதற்காக அவரை 20 முறை தூக்கில் போடலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

நக்ஸலைட் ஊடுருவல்

ஆந்திர, கர்நாடக மாநிலங்களில் நக்ஸல் அமைப்புகளுக்குத் தடைவிதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழக எல்லையில் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது. நக்ஸலைட்டுகள், தமிழகத்தில் ஊடுருவி விடாமல் இருக்கவே, இந்த நடவடிக்கை என்கிறார்கள், போலீஸார்.

தமிழகத்தில் அந்த அமைப்புகளுக்கு ஏற்கெனவே தடை போடப்பட்டிருக்கும் நிலையில், இந்த நடவடிக்கை எந்த அளவுக்கு அவசியமானவை என்று அறிய காவல்துறை அதிகாரியிடம் பேசினோம்.

‘‘மேலோட்டமாகப் பார்த்தால் ஆந்திர நக்ஸல் அமைப்பினர், தமிழகத்தில் ஊடுருவுவதாகவே தெரியும். ஆனால், அது சாத்தியம் இல்லை’’ என்கிறார் ஓர் அதிகாரி.

‘‘ஆந்திர, கர்நாடக நக்ஸல்களுக்கு முக்கியப் பிரச்னையே மொழிதான். அதற்குமேல் பிரதான சமாசாரம் ஒன்று உள்ளது. அது நம்பகத்தன்மை. நம்ம ஊரில் இருக்கிற குட்டி, குட்டி அமைப்பினரை அவர்கள் நயாபைசா அளவிற்கும் நம்புவது கிடையாது. பயிற்சி, ஆயுதம், பொருளாதாரம் (பணம்) போன்ற எதை எடுத்தாலும் தமிழக அமைப்புகள் அதலபாதாளத்தில் உள்ளனர். ஆந்திர நக்ஸலைட்டுகள் ஏ.கே. 47 ரக துப்பாக்கிகளையும், ஏவுகணைகள், ரேடார் போன்ற சர்வபலத்துடனும், இவற்றிற்கெல்லாம் மிஞ்சி கோடிக்கணக்கான பணத்தையும் வைத்திருக்கின்றனர்.

ஆனால், இங்குள்ள அமைப்பினர் அன்றாடங் காய்ச்சிகளாக, வழிப்பறி போன்றவற்றைச் செய்துகொண்டு சிம்னி விளக்கு குப்பியில் வெடிகுண்டு தயாரிக்கும் அளவுக்கே இருக்கின்றனர்’’ என்றார், அவர்.

‘‘ஆந்திர மாநில எல்லையோரம் உள்ள வேலூர், பேர்ணாம்பட், வாணியம்பாடி, கிருஷ்ணகிரி போன்ற அனைத்துப் பகுதிகள் வழியாகவும் நக்ஸல் அமைப்புகள் ஓரளவுக்கு தருமபுரிக்குச் சென்று விடலாம்.

அதுவும் அவ்வளவு சுலபமல்ல. இந்தப் பகுதிகளின் மையத்திலிருக்கும் திருப்பத்தூரில், கியூபிராஞ்ச் அலுவலகம் ஒன்று இதையெல்லாம் கண்காணிக்கச் செயல்படுகிறது.

இவர்களுடைய நெட் ஒர்க் நீண்ட நெடுநாள் பழையது. எங்கும் ஊடுருவியுள்ளது என்பதால், எது நடந்தாலும் அறிந்துகொள்ளும் அளவுக்கு ஸோர்ஸ்களை அவர்கள் வைத்திருக்கின்றனர்.

எனவே, தமிழகத்தினுள் ஊடுருவ ஆந்திர நக்ஸல்கள் ஒருபோதும் முயன்றது கிடையாது. அது சாத்தியமும் இல்லை’’ என்கிறார் ஓய்வுபெற்ற அதிகாரி.

ஆந்திராவின் சித்தூர் மாவட்டம்தான் தமிழக எல்லையோரம் இருக்கிறது.

இம்மாவட்டத்தில்தான் திருப்பதியும், சந்திரபாபு நாயுடுவின் குப்பம் தொகுதியும் உள்ளன.

இந்த மாவட்டத்திலிருந்து ஐதராபாத் 614 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அதையும் தாண்டித்தான் ஸ்ட்ராங்கான ஆந்திர நக்ஸல் அமைப்புகள் உள்ளன.

இவைகளுக்கு எடுபிடி வேலைகளைச் செய்ய மட்டும் சித்தூர் மாவட்ட ஸ்ரீ காளஹஸ்தியிலும் குப்பம் பகுதியிலும் குறைந்த எண்ணிக்கையில் குழுக்கள் உள்ளனவாம்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை இப்பகுதி குழுக்கள், சென்னை துறைமுகப் பகுதியில் தாங்கள் சில வேலைகளை வைத்துக் கொண்டிருந்ததாகக் கூறுகிறார்கள்.

எல்.டி.டி.ஈ.யிடமிருந்து ஆயுதங்கள் ரகசியமாக இந்த துறைமுகத்துக்கு வருகின்றன. அதை இறக்குமதி செய்து நக்ஸல் அமைப்பினருக்கு இவர்கள்தான் அனுப்புகிறார்கள் எனத் தகவல் பரவியதையடுத்து, இவர்களின் செயல்பாடுகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டுவிட்டனவாம்.

இப்படியிருக்க, 600 கிலோ மீட்டர் தூரத்துக்கப்பால் இருந்து ஓடிவந்து தமிழகத்தினுள் ஊடுருவுவதாகக் கூறுவது நம்ப முடியாத சமாசாரம் என்றே கருதப்படுகிறது.

நேபாளம் முதல் தமிழகத்தின் தருமபுரி வரை நாற்பதாயிரம் நக்ஸலைட்டுகள் உள்ளதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது. ஆனால் இவற்றின் பலம் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடுகிறது.

ஆந்திராவில் மாநில முதல்வருக்கே சவால் விடும் அளவுக்கு நக்ஸல்கள் வளர்ந்துள்ளனர்.

சமீபத்தில் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.வை நக்ஸல்கள் சுட்டுத் தள்ளிய பிறகு, அதற்குப் பதிலடியாக அரசு தரப்பு, ஜனசக்தி என்கிற அமைப்பின் முக்கியத் தலைவரான சாகர் உட்பட பலரைப் பிடித்துவிட்டது. இந்த வேட்டையில் முக்கிய நக்ஸல் தலைவர்களில் ஒருவரான அமர் என்பவர் தப்பிவிட்டார்.

தப்பிச் சென்ற அமர், சாதாரண லீடர் இல்லை என்பது அரசு தரப்புக்குத் தெரியும். அவர் கரீம் நகர் மாவட்டத்தில் ஊடுருவியதே சி.எம்.முக்கு வைத்த குறியை நிறைவேற்றத்தான் என்று அம்மாநில உளவுத்துறை எச்சரிக்க, முதல்வர் ராஜசேகர ரெட்டிக்குக் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தமிழகத்தில் 25 ஆண்டுகளுக்கு முன்பு, தேவாரம் தருமபுரியில் நக்ஸல்களை வேட்டையாடினார். அதன்பிறகு இங்கே எந்தச் சலனமும் பெரிதாக இல்லை. இடையே 2002_ல் ஊத்தங்கரை பகுதியில் சிவா என்பவரைச் சுட்டுக் கொன்ற போலீஸ், 24 பேரை கைதுசெய்து அவர்களை நக்ஸல்பாரிகள் என்று குற்றம் சுமத்தினர். அவர்கள் நக்ஸலைட்டுகள் இல்லை என்று தற்போது வழக்கு போய்க் கொண்டிருக்கிறது. இதையடுத்து சமீபத்தில் அங்கே சிம்னி விளக்கு வெடிகுண்டுகள் பிடிபட்டதுதான் பெரிய செய்தி. இதெல்லாம் நக்ஸல்கள் அமைப்பு இங்கே பலம் வாய்ந்தவையாக ஆக்டிவ்வாக இல்லை என்பதையே காட்டுவதாகக் கருதுகிறார்கள்.

‘‘ஆந்திராவை எடுத்துக் கொண்டால் நக்ஸல் அமைப்புகள் எல்லாத் துறையிலும் ஊடுருவி உள்ளார்கள். மீடியா, அரசியல், போலீஸ் என பல துறையிலும் உள்ளதால் இவர்களை அடக்க முயலும், அரசு நடவடிக்கைகள் முடங்கிப்போகின்றன’’ என்கிறார், நம்மிடம் பேசிய ஓர் அதிகாரி.

‘‘இந்த இயக்கங்களில் ஈடுபாட்டுடன் இருந்த பலர், அவற்றை விட்டுவிட்டு திருந்தி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். தமிழகத்தில் பொருளாதார நிலையும் உயர்ந்துகொண்டே வருவதால், நக்ஸல்கள் அமைப்பு இங்கே வளருவது சிரமம்தான். இருந்தாலும் தமிழகக் காவல்துறையினர் விழிப்புடன் இருப்பதற்குக் காரணம், கொஞ்சம் அயர்ந்தாலும் இங்கே ஆந்திரா போல நக்ஸல் அமைப்புகள் பெருகிவிடக் கூடும் என்ற எச்சரிக்கை உணர்வுதான்’’ என்கிறார், அந்த அதிகாரி.
நன்றி குமுதம்

வீரமங்கை வேலுநாச்சியார்



இந்தியாவின் விடுதலைக்கு ஆயுத மேந்திப் போராடிய முதல் பெண் போராளி வீரமங்கை வேலுநாச்சியார் 1730 இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி சக்கந்தி முத்தாத்தாளுக்கு ஒரே பெண் மகவாக பிறந்தார் ஆண் வாரிசாக வளர்க்கப்பட்டார். ஆயுதப் பயிற்சி பெற்றார். பல மொழிகள் கற்றார். 1746ல் சிவகெங்கை மன்னர் முத்துவடுகநாதருக்கு மனைவியானார்.

1772ல் வெள்ளைக்கார வெறியர்களின் படையெடுப்பால் ஏற்பட்ட நெருக்கடியைச் சமாளிக்க இடம் மாறி மாறிச் சென்றார் வீரத்தாய் வேலுநாச்சியார். வெறியர்களின் கொட்டத்தை அடக்க நினைத்த வேலுநாச்சியார் அவர்கள் விருப்பாட்சியில் தங்கி ஹைதர் அலியைச் சந்தித்து அவருக்கே தெரிந்த உருது மொழியில், வெள்ளையர் எதிர்ப்பு பற்றி திறமையாக அழகுற பேசி விளக்கினார். வேலு நாச்சியாரின் உருது மொழித் திறமையைக் கண்டு ஆச்சர்யப்பட்ட, ஹைதர்அலி உதவிகள் பல செய்வதாக உறுதியளித்தார்.

ஏழாண்டுகாலம் திண்டுக்கல் கோட்டை, விருப்பாட்சிக் கோட்டை, அய்யம்பாளையம் கோட்டை என இடம்மாறி மாறி முகாமிட்டு, வெள்ளையர்களை விவேகத்துடன் எதிர்த்தார். இதற்கிடையில் தமது எட்டுவயது மகளையும் பாதுகாக்க வேண்டிய நிலை. அமைச்சர் தாண்டவராயன் பிள்ளையின் முயற்சியினால் சிவகெங்கை மக்கள் பிரதிநிதிகள் வேலுநாச்சியாரோடு கலந்து பேசியதன் மூலம் வீரமிக்க விடுதலைப்படை ஒன்று உருவாக்கப்பட்டது. மருது சாகோதரர்களுடன், வேலுநாச்சியாரே போராட்டத்துக்கு தலைமை தாங்கினார்.

1780 ஐப்பசித் திங்கள் 5ம் நாள் வேலுநாச்சியார் தலைமையில் ஒரு படை திண்டுக்கல்லிலிருந்து சிவகெங்கை நோக்கிப் புறப்பட்டது. ஹைதர் அலி ஒத்துழைப்போடு பீரங்கிப்படை ஒன்றும் தரப்பட்டது. படை காளையார் கோயிலை கைப்பற்றியது. சிவகெங்கையில் வேலுநாச்சியார் அவர்கள், தம்மைக் காட்டிக் கொடுத்காது வெள்ளையரால் வெட்டுண்ட உடையாளுக்கு வீரக்கல் ஒன்டறை நட்டு, தமது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தி அஞ்சலி செலுத்தினார் நாச்சியார் தொடர்ந்து பூஜை செய்ய உத்திரவிட்டார்.

இந்தக் கோயில் கொல்லங்குடி வெட்டையார் 'காளியம்மாள்' என்று அழைக்கப்படுகிறது. இறுதியாக சிவகங்கை நகரைக் கைப்பற்ற சின்னமருது பெரிய மருது, வேலுநாச்சியார் அவர்கள் தரைலமையில் படை திரட்டப்பட்டது.

சிவகங்கை அரண்மைனயில் விஜயதசமி, நவராத்திரி விழாவிற்காக கூடிய மக்கள் கூட்டத்தில் பெண்கள் படை மாறுவேடத்தில் புகுந்து அதில் 'குயிலி' என்ற பெண் தன் உடம்பில் தீ வைத்து வெள்ளையரின் ஆயுதக் கிடங்கை எரித்து ஆயுதங்களை அழித்தாள். வேலுநாச்சியார், தனது ஐம்பதாவது வயதில், தனது கணவரைக் கொன்ற ஜோசப் ஸ்மித்தையும் தளபதி பான் ஜோரையும் தோற்கடித்தார்.

வேலு நாச்சியார் கைபட்பற்றிய தமது நாட்டிற்கு பெரிய மருதுவை தளபதியாகவும், சின்னமருதுவை அமைச்சராகவும்த நியமித்தார். வேலுநாச்சியார் மகள் வெள்ளச்சிக்கும் சக்கந்தி வேங்கண் தேவருக்கும் திருமணம் செய்து வைத்தார். 1780-1789 வரை ஆட்சியில் இருந்தார். 1789-ல் மருமகனுக்கு ஆட்சிப்பொறுப்பை மாற்றிக் கொடுத்தார். 1790-ல் அவரது மகளின் மறைவினால் மடைமுடைந்த வேலுநாச்சியார் இதய நோயாளியாகி சிகிச்சைக்காகபிரெஞ்சு நாட்டுக்குச் சென்றார்.

1793-ல் வேலு நாச்சியாரின் பேத்தி மரணம் நாச்சியாருக்கு துயரம் அதிதமானது. அதனால் விருப்பாட்சி அரண்மனையில் தங்கினார். பெரும் போராட்டங்களையும் சோதனைகளையும் சாதனைகளாக்கி, வீரசாகசங்கள் புரிந்து நாட்டை மீட்டிய வீரத்தாய்
25-12-1796 அன்று இறந்தார்.
இதன் தொடர்ச்சியாக இன்று வரை சிவகங்கைச் சீமையை ஆட்சி புரிந்த மன்னர்களின் வம்சாவழிப்பட்டியலை அரசாங்கத்தின் ஆவணக்காப்பகத்தின் தக்க ஆதாரங்களுடன் உண்மையினை நாட்டிலுள்ள அனைவரும் தெரிந்து கொள்ள அன்புடன் வெளியிடப்பட்டுள்ளது.

1ம்....1728 - 1749...முத்து வீஜயரகுநாத உ. சசிவர்ணத்தேவர்
2ம்....1749 - 1772...சசிவர்ண விஜயரகுநாத முத்துவடுகநாதப்பெரிய உடையத்தேவர்
3ம்....1780 - 1789...வீரமங்கை ராணி வேலு நாச்சியார் முத்துவடுகநாத பெரிய உடையாத்தேவர்
4ம்....1790 - 1793...இளவரசி வெள்ளச்சி நாச்சியார் - ராணி வேலு நாச்சியாரின் ஒரே மகள்
5ம்....1793 - 1801...வேங்கை பெரிய உடையணத்தேவர் இளவரசி வெள்ளச்சி நாச்சியாரின் கணவர்
6ம்....1801 - 1829...கெளரிவல்லப உடையணத்தேவர் மன்னர் முத்துவடுகநாத பெரிய உடையணத்தேவரின் உடன் பங்காளி ராணி வேலு நாச்சியாரின்
சுவீகார மைந்தன்
7ம்....1829 - 1831...உ.முத்துவடுகநாதத்வேர்
8ம்....1831 - 1841...மு. போதகுருசாமித்தேவர்
9ம்....1841 - 1848....போ. உடையணத்தேவர்
10ம்..1048 - 1863....மு.போதகுருசாமித்தேவர்
11ம்..1863 - 1877....ராணி காதமநாச்சியார் போதகுருசாமி
12ம்..1877..............முத்துவடுகநாதத்தேவர்
13ம்..1878 - 1883....துரைசிங்கராஜா
14ம்..1883 - 1898....து. உடையணராஜா
15ம்..1898 - 1941....தி. துரைசிங்கராஜா
16ம்..1941 - 1963....து. சண்முகராஜா
17ம்..1963 - 1985....து.ச.கார்த்தகேயவெங்கடாஜலபதி ராஜா
18ம்..1986..............முதல் ராணி டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார்.

ennar

மாவீரன் பூலித்தேவன்

மாவீரன் பூலித்தேவன்


முதன் முதலில் விடுதலைக்கு குரல் கொடுத்தவர் வீரபாண்டிய கட்டபொம்மனோ அல்ல! ஜான்சிராணி லக்குமிபாயோ அல்ல!!

சிப்பாய் கலகமும் அல்ல!!! தென்னகத்து பூலித்தேவன் தான். ஏனோ வரலாறுகள் தமிழர்களை மூடிட்டு வைத்து மறைக்கின்றன.

மாவீரன் பூலித்தேவன் ஒரு மாபெரும் புரட்சித் தலைவன். தென்பாண்டி நாட்டில், திருநெல்வேலிச் சீமையில் தோன்றி தன்னிகரற்றுத் தலைநிமிர்ந்து வாழ்ந்த தமிழ் மறவன்! நெற்கட்டான் செவ்வலைத் தலைமையிடமாகக் கொண்ட செங்கோலொச்சிய பாளையக்காரனாவான். தன்பாளையத்திற்கு மட்டுமின்று மேற்குப் பாளையத்தார்களுக்கெல்லாம் தலைமையேற்று மாற்றாரை நடு நடுங்கச்செய்த மாபெரும் போர்வீரன்.

இந்திய விடுதலைக்காக வெள்ளையரை எதிர்த்து முதன் முதலில் 'வெள்ளையனே வெளியேறு' என்று முதல் முழக்கமிட்ட விடுதலைப் போராளி பூலித்தேவனேயாவான். இவனுடைய வீர வராலாறு இந்திய விடுதலை வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்றாகும். அரை நூற்றாண்டுக்கு மேலாக தென்னகத்தை ஒரு கலக்குக் கலக்கிய மாவீரன் பூலித்தேவனின் சாதனைகள் பற்றி இன்னமும் சரித்திர ஆசிரியரகள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தத் தமிழ் மறவன் பூலித்தேவனின் வரலாற்றுச் சுவடிகளில் சிலவற்றைக் இங்கு காண்போம்.


மதுரையில் நாயக்க மன்னர்களின் ஆட்சி 1529 முதல் 1736 வரை இருந்தது. இவர்களில் விசுவநாத நாயக்கர் முதல்வராவார். இவர் 1529 முதல் 1564 வரை ஆட்சி புரிந்தார். இவருடைய ஆட்சி காலத்தில் தான் பாண்டிய நாடு 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாளையமும் ஒருவரின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு அவர்களுக்கு அந்த பாளையத்துக்கு உட்பட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டன.

இவ்வாறு பாளையங்களாக பிரிக்கப்பட்டதன் காரணம் பாண்டிய வமசத்தினர் மீண்டும் படைத் திரட்டி ஆட்சியைப் பிடிப்பதை தவிர்ப்பதற்காகத்தான். மதுரை, திருச்சி, கொங்குநாடு ஆகிய பகுதிகளில் தெலுங்கர்களையே நாயக்க மன்னன் நியமித்தான். திருநெவேலிச் சீமையில் தான் பெரும்பாலும் தமிழர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

மேலும் பாண்டிய வம்சத்தின் சிலரையும் பாளையக்காரர்களாக நியமித்து ஓரளவு வம்சாவழி எதிர்ப்பையும் அடக்கினான். மக்களிடத்து இவ்வாறு அதிகார வரம்பை பகிர்ந்தளித்ததால் மக்கள் எதிர்ப்பும் குறைந்தது. ஆனால் அதற்குப் பிறகு வந்த நாயக்க அரசர்களின் ஆட்சி பலவீனமடைந்தது. இதனால் ஓரளவு சுய அதிகாரம் பெற்றிருந்த பளையக்காரர்கள் சிறிது சிறிதாக நாயக்கராட்சியின் கட்டுப்பாட்டிலிருந்து விலகினார்கள்.

இத்தனைய பாளையங்களில் ஒன்றுதான் நெற்கட்டான் செவ்வல் பாளையம் இந்திய விடுதலைப் போருக்கான முதல் குரல் இந்த பாளையத்திலிருந்து தான் ஒலித்தது. அந்த குரலுக்கு உயிர் கொடுத்தவரின் பெற்றோர்கள் பெயர் சித்திர புத்திரத் தேவரும் சிவஞான நாச்சியாரும் ஆவர்.

1-9-1715 ல் மாவீரன் பூலித்தேவர் இவர்களின் புதல்வராக தோன்றினார். இயற்பெயர், 'காத்தப்ப பூலித்தேவர்' என்பதாகும் 'பூலித்தேவர்' என்றும் 'புலித்தேவர்' என்றும் அழைக்கலாயினர் பூலித்தேவர் பிறந்த பொழுது அந்த பகுதி மக்கள் மிகவும் மகிழ்ச்சியுற்றனர். அதற்கு காரணம் பூலித்தேவரின் தந்தை சித்தி புத்திரத் தேவரின் நல்லாட்சிதான். அவருடைய ஆட்சி நல்ல முறையில் இருந்ததால்தான் மக்கள் அவர் மீது மதிப்பு வைத்திருந்தார்கள். அதனால் தான் அவருக்கு பூலித்தேவர் பிறந்தபொழுது, மக்கள் மகிழ்வுற்றார்கள்.

சித்திரபுத்திரத் தேவர் எந்த பிரச்சினையும் இல்லாத அறுபத்து மூன்று ஆண்டுகள் மக்கள் போற்றும் வண்ணம் ஆண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாளைக்காரர்கள் மத்தயில் அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. இத்தகைய ஒரு சூழலில்தான் பூலித்தேவர் வளர்க்கப்பட்டார். சிறுவயதில் தாதிகளிடம் தன்னுடைய முன்னோர் பற்றிய வீர வரலாறுகளைக் கேட்டு மகிழ்ந்தார்.

மேலும் அந்த பிஞ்சு உள்ளத்தில் இறையுணர்வு பற்றிய தெளிவான விளக்கமும் பதிய வைக்கப்பட்டது. இவ்வாறு சிறுவயதில் ஊன்றப்பட்ட வீர உணர்ச்சியும், இறையுணர்வும் இறுதிவரை அவர் மனதில் இருந்தது. பூலித்தேவர் ஆறு வயது சிறுவனாக இருக்கும் பொழுது அவருக்கு முறைப்படியான கல்வி ஆரம்பிக்கப்பட்டது.

சிறு வயதிலேயே முன்னோர் பெருமைகளைப் பற்றிக் கேள்விப் பட்டதால் தாமும் அவர்களைப்போல் பேரும் புகழும் பெற்றுத் திகழ வேண்டும் என்ற உறுதி பூலித்தேவர் மனதில் இருந்தது. இலஞ்சியைச் சேர்நத சுப்பிரமணிய பிள்ளை என்பவரிடம் சன்மார்க்க நெறிகளைப் பூலித்தேவர் பயின்று வந்தார் மற்ற தமிழ் இலக்கண, இலக்கிய நூல்களையும் கற்று, தாமே கவிதை எழுதும் அளவுக்குத்திறம் பெற்று விளங்கினார்.

பூலித்தேவருக்கு பன்னிரண்டு வயதான பொழுது அவருக்குப் போர்ப் பயிற்சி தொடங்கப்பட்டது. குதிரை ஏற்றம், யானை ஏற்றம்,மல்யுத்தம், வாள் வீச்சு, வேல் எய்தல், அம்பு எய்தல், சிலம்பு வரிசைகள், கவண் எறிதல், வல்லயம் எறிதல் மற்றும் சுருள் பட்டா சுழற்றுதல் போன்ற சகலவிதமான வீரவிளையாட்டுக் களிலும் அவருக்குப் பயிற்சி அளிக்கப்ட்டது. மேற்கு தொடர்ச்சி மலையிலுள்ள புலிகளைக் கொன்று விளையாடுவதில் அவருக்கு மிகுந்த விருப்பம் புலித்தோல் மற்றும் புலி நகங்களை அணிவதிலும் அவருக்கு விருப்பமுண்டு.

இதனால் பூலித்தேவரை எல்லோரும் புலித்வேர் என்றே அழைத்து வந்தனர் பூலித்தேவரைப் பார்த்தவுடன் அவர் ஒரு மாவீரன் என்று கூறுமளவிற்கு அவருடைய உடல்வாகு இருந்தது. அவரைப் பற்றிய ஒரு நாட்டு பாடலில் அவரின் உடல்வாகு பற்றிக் கூறப்பட்டுள்ளது. மாவீரன் பூலித்தேவர் ஆறடி உயரமுடையவர். சோதியைப் போல முகமிருக்கும், திண் தோள்களை உடையவர், பல்லோ பளபளக்கும், பவளம் போன்ற உதடுகளும், மார்பும் இருந்ததாக அப்பாடல் கூறுகின்றது.

காத்தப்ப பூலித்தேவரின் திறமையைக் கண்ட அவரது பெற்றோர் அவருடைய பன்னிரண்டாவது வயதில் அதாவது 1726 ல் அவருககுப் பட்டம் சூட்டி அரசராக்கினார்கள். பூலித்தேவரின் வயதுக்கு மீறிய ஆற்றலைக் கண்டுதான் அவருடைய பெற்றோர்கள் துணிந்து அவரை அத்தனை இளம் வயதில் மன்னராக்கினர். மன்னரைப்போலவே நெற்கட்டான் செவ்வல் மக்களும் இந்த முடிவை வரவேற்றார்கள்.

பின்னர் பூலித்வேருக்கு திருமண ஏற்டபாடுகள் நடைபெற்றன. அவருக்கு வாழ்க்கை துணைவியாக அமைந்தவர் அவருடைய மாமன் மகள் கயல்கண்ணி என்கின்ற இலட்சுமி நாச்சியார்தான். கயல்கண்ணி நல்ல அழகி மட்டுமல்ல, வீர விளையாட்டுக்கள் விளையாடுவதிலும் பூலித்தேவருக்கு உற்ற துணையாக விளங்கியவர். கயல் கண்ணியின் சகோதரர் சவுணத்தேவரும், பூலித்தேவரும் இணைபிரியாத நண்பர்கள். பூலித்தேவரின் இல்லற வாழ்ககை கண்ட அவருடைய பெற்றோர்கள் மிகவும் மகிழ்சியடைந்தார்கள். பூலித்தேவருக்கு கோமதி முத்துத் தலவசச்சி, சித்திர புத்திர தேவன் மற்றும் சிஞானப் பாண்டியன் என்று மூன்று நன்மக்கள் பிறந்தனர்.

பூலித்தேவருக்கு பதினெட்டு வயதிருக்கும் பொழுது கிழக்குப் பளையங்களைச் சேர்ந்த இலவந்தூர் , ஈராட்சி ஆகியவற்றிற்க்கு ஏற்பட்ட எல்லைத் தகராறைத் தீர்த்து வைக்கச் சென்றிருந்தார். அச்சமயம் சிவகிரிப் பாளையத்தான் வந்து கால் நடைகளைக் கவர்ந்து சென்றான். இந்தச் செய்தியை ஒற்றன் மூலம் பூலித்தேவருக்கு கூறப்பட்டது. உடனே அவர் தளபதியான சவனத்தேவருக்கு செய்தி அனுப்பி சிவகிரிப் பளைக்காரணை தடுத்து நிறுத்துமாறு கட்டளையிட்டார்.

உடனே 150 வீர்களுடன்ட புறப்பட்டு நேராக சிவகிரிப் படைகளைத் தாக்குவதற்குச் சென்றார். பூலித்தேவர் போர்க்களத்தில் நுழைந்ததும் சிவகிரி படைகளின் எண்ணிக்கை கனிசமாக் குறைந்து கொண்டே வந்தது. இதனைக் கண்டு மேலும் பலர் களத்தை விட்டு ஓடினர். பூலித்தேவர் இறுதியில் வெற்றிகரமாக கால்டைகளை மீட்டுச் சென்றார். அக்காலப்போர் முறையின் முதற்கட்டமே வேற்று நாட்டின் கால்நடைகளைக் கவர்ந்து செல்வதுதான்.

போரில் வெற்றிபெற்றாலும் சவணத்தேவர் கூடலூர் வரை எதிரிகளை துரத்திச் சென்று போரிட்டார். அவர்களின் எல்லைக் கருகில் சென்று விட்டதால் எதிரிகளின் எண்ணிக்கை கூடிவிட்டது.

ஆனாலும் மனம் தளராது போராடி பல பேரை சவணத்தேவர் கொன்று குவித்தார். ஆனால் களத்தில் அவர் தன்னுடைய ஒரு காலை இழந்தார். அதையும் பொருட்படுத்தாமல் அவர் போராடியதில், இறுதியில் அவருக்கு முழு வெற்றி கிடைத்தது. ஆனால் அதற்கு விலையாக தன் உயிரைக் கொடுக்க நேரிட்டது.

மாவீரன் பூலிதேவருக்குத்தான்ஒரு வீரனின் மதிப்பும் அவனுடைய இழப்பையும் உணரமுடியும் . அந்த வீரத்தளபதியின் நினைவாக பூலித்தேவர் வீரக்கல் நட்டு பெருமைப்படுத்தனார். பூலிதேவரின் இளம் வயது போர் வெற்றி அவருக்கு போர்க்கள நுணுக்கங்களில் மேலும் முதிர்ச்சியைக் கொடுத்தது.

மதுரையில் விசயரங்க சொக்கநாத நாயக்கர் (1704-1731) ஆட்சிக்காலத்தில் மதுரையின் வட பகுதியில் புலி ஒன்று பதுங்கியிருந்தது. அவ்வழியாகப் போவோரையிம், வருவோரையும் கொன்று கொண்டிருந்தது. எவராலும் அடக்க இயலாது போன அந்தப் புலியை அடக்கு வோருக்கு தகுந்த சனமானம் வழங்கப்படும் என்று அனைத்துப் பாளையக்காரர்களுக்கும் ஓலை அனுப்பபட்பட்டது.

இச்செய்தியை அறிந்தவுடன் பூலித்தேவர் மதுரைக்குப் புறப்பட்டுச் சென்றார். சிங்கம் போல் நடை நடந்து வரும் காலடி ஓசையைக் கேட்டவுடன் புலியனது பூலித்தேவர் மீது பாய்ந்தது. முதல் பாய்ச்சலுக்கு புலியிடமிருந்து ஒதுங்கியவர், இரண்டாவதாக பாய்வதற்கு முன்னர் சட்டென்று புலியின் மீது பாய்ந்து அதன் பின்னங்கால்களைப் பிடித்து தலைக்கு மேல் தூக்கி ஓங்கி தரையில் அடித்தார் . பூலித்தேவரின் வலிமையைத் தாங்க இயலாத புலி இரத்தம் கக்கி இறந்தது. புலிவேட்டை என்கின்ற பெயரில் பல வீரர்கள் துணையோடும். துப்பாக்கிகளோடும் பூலித்வேர் செல்லவில்லை. தனியொருவராக நின்று வென்றார்.

இதனால் இவருடைய புகழ் தென்னகம் முழுவதும் பரவியது. மதுரை மன்னனும். வடக்காத்தான் பூலித்தேவன் என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தான்.

பூலித்தேவர் சிறுவயது முதலே கடவுள் பக்தியுடையவராக இருந்தார். தாம் எவ்வளவுதான்வலிமையுடையவராக இருந்தாலும் அனைவருக்கும் மேல் ஒருவர் இருக்கின்றார் என்ற உணர்வுதான் அவரை சுயகட்டுப் பாட்டில் வைத்திருந்தது. இல்லை யென்றால் அவருக் கிருக்கும் ஆற்றலுக்கு அவர் மற்றவர்களைப் போல நாடு பிடிக்ககிளம்பியிருக்கக் கூடும்.

அவர் தன்னுடைய குல தெய்வமான உள்ளமுடையாரைத் தினமும் வணங்கி வந்தார். வேதியர்களைக் கொண்டு வேதம் முழங்கச் செய்து, தினந்தேறும் அன்னதானம் செய்து வந்தார், அதற்காக நிலங்களையும் மானியமாக மட்டுமே அரசராக இருந்தாலும் தன்னால் முடிந்தவரை பலவித கோயில்களுக்கு நற்பணி செய்து வந்தார்.

பாளையத்திலிருந்து வரும் வருமானத்தை அவர் நிர்வாகத்திற்கும், மக்களுக்கும் பயன்படுத்தி மற்றும் எஞ்சியதை கோயில் திருப்பணிக்காகவும் செலவு செய்தாரே தவிர தமக்கோ தம் சந்ததியருக்கோ சேர்த்து வைத்து சுகபோகமாக வாழவேண்டும் என்று நினைத்த தில்லை. தன்னுடைய குலதெய்வமான பூலுடையார் கோயில் தவிர சங்கரன்கோயில், பால்வண்ணநாதர் கோயில், வாசுதேவ நல்லூர் அர்த் நாரீசுவரர் கோயில், நெல்லை வாகையாடி அம்மன் கோயில் மற்றும் மதுரை சொக்கநாதர் கோயில் என்று திருநெல்வேலிச் சீமையில் உள்ள பல கோயில்களுக்கும் பூலித்தேவர் திருப்பணி செய்துள்ளார். திருப்பணிகள், முழுக்கோவிலையும் சீர்படுத்துவது முதல் அணிகலன்கள் வழங்குவது வரை பலதரப்பட்டது.

கோவில் பணிகள் தவர மற்ற பொதுப் பணிகளான நெடுந்தொலைவு பயணம் செய்பவர்களுக்கு இளைப்பாற ஆங்காங்கே மண்டபம் கட்டுதல், சத்திரம் அமைத்து உணவு வழங்குதல், ஆங்காங்கே நீர் நிலைகள் அமைத்தல், வெட்டவெளி பிரதேசங்களில் மரங்கள் நட்டு நந்தவனமாக்குவது, மற்றும் விளைச்சல்பெருக கால்வாய்கள் அமைத்துபாசன வசதி பெருக்குவது என்று மக்களின் தேவை அறிந்து மன்னர் பணி செய்தார். இருபத்தொன்றாம் நூற்றாண்டில் அடிப்படை வசதிகளைச் செய்ய ஜனநாயக அரசு தட்டுத் தடுமாறும் நிலையில், பதினெட்டாம் நூற்றாண்டில் இயற்கையின்அரவணைப்பில், எந்த குறைகளும் இல்லாது வாழ்ந்த நிலையிலும் கூட, மேலும் மக்களுக்கு வசதி செய்துகொடுக்க வேண்டும் என்று நினைத்த மன்னருக்கு, இன்று பேச்சளவில் மட்டுமே இருக்கும் பொதுவுடமை சிந்தனைகள் சற்று அதிகமாகவே இருந்தது என்று தான் கூறவேண்டும்.

மன்னர் பூலித்வேருக்கு பொதுவுடைமை சிந்தனை மட்டுமல்ல, தொலைதூர நோக்கும் சற்று அதிகமாகத்தான் இருந்தது. பூலித்வேர் ஆட்சி செய்து காலம் பாண்டியராட்சியின் முடிவும், நாயக்கராட்சியின் சரிவு காலமும் ஆகும். ஆற்காடு நவாப்பின் அத்துமீறல்கள் அதற்குள் ஆங்கிலேயரின் வருகை என்று பல தோற்றம் மறைவுகளைச் சந்தித்துக் கொண்டிருந்தகாலம். இவ்வாறு பெரிய அளவில் நடக்கும் ஆட்சி மாற்றங்களால் சிறிய பாளையக்காரர்களுக்கு ஆபத்துஎன்பதை மன்னர் உணர்ந்தார்.

அதனால் அனைத்துப் பளையக் காரர்களையும் ஒன்று கூட்டி அரசியலில் ஏற்படும் மாற்றங்களை பற்றித் தீவிரமாக விவாதித்து பாளையக்காரர்கள் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார். இத்தகைய ஒரு கோணத்தில் இதுவரை சிந்திக் காத பிற மன்னர்களுக்கு, இந்தக் கருத்து புதியதாகவும் அதே சமயம் தவிர்க்க முடியாத தாகவும் இருந்தது.

ஆனால் நடைமுறையில் எத்தனை பேர் ஒத்துழைத்தனர் என்பது பிற்கால வரலாறு. அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டியதன் நோக்கம், தன்னுடைய ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டும் அல்ல. தன் தாய்திருநாடு அன்னியர் வசம் சிக்கிவிக் கூடாது என்கின்ற தன்மான உணர்ச்சிதான். மேலும் அன்னியராட்சியில் குடிமக்களின் நலன் அவ்வளவாக போற்றப் படுவதில்லை.

பூலித்தேவர் திட்டப்படி அனைத்து பாளையக்காரர்களும் நாயக்கராட்சிக்குக் கப்பம் கட்டுவதைத் தவிர்த்தனர். நாயக்கராட்சியும் வலுவிழந்து முகம்மதியர்கள் கையில் விழுந்தது. பின்னர் அது மகாராஷ்டிர அரசர்கள் கைகளுக்கு மாறி பின்னர் மீண்டும் முகம்மதியர் கைக்கு வந்தது.

ஆனால் ஆற்காடு நவாபுக்கும் மற்றோரு முகம்மதிய அரசனுக்கும் இடையில் ஏற்பட்ட பூசல் காரணமாக இரு பிரிவனரும் தனித்தனியே கப்பம் வசூல் செய்ய முனைந்தனர். இந்த இரு பிரிவினருக்கும் நடந்த குழப்பத்தப் பயன்படுத்தி, பாளையக்காரர்கள் கப்பம் கட்டுவதை மொத்தமாக நிறுத்தினார்கள்.

இத்கு சூழ்நிலையில் ஆற்காடு நவாபு ஆங்கிலேயர்களின்உதவியை நாடினான். இருவருக்கும் நடந்த ஒப்பந்தப்படி ஆற்காடு நவாபு வரிவசூலிக்கும் உரிமையை ஆங்கிலேயர்களிடம் ஒப்படைத்தான். அன்றிலிருந்து ஆங்லேயர்கள் இந்திய மன்னர்களோடு நேரடியாகப் போரிட ஆரம்பித்தனர்.

ற்காடு நவாபின் பதவியை தக்க வைத்துக்கொள்ளும் ஆசையினால் பின்னர் இந்திய நாட்டு மக்கள் இருநூறு வருடங்கள் துயரப்பட நேர்ந்தது. பாளையக் காரர்கள் கப்பம் கட்டாததால் கர்னல்ஹெரான் தலைமையில் கும்பினிப் படைமற்றும் ஆற்காடு நவாபின் அண்ணன்மாபூஸ்கான் தலைமையில் நவாபு படைகளும் 1755-ஆம் ஆண்டு பாளையக்காரர்களைத் தாக்குவதற்குப் புறபட்டது. பேச்சளவில் இருந்த பாளையக்காரர்களின் ஒற்றுமை போர் என்றவுடன் உடைந்தது.

ஒவ்வொறு பாளையக்காரனும் சமாதானம் என்கிற பெயரில் கப்பம் கட்டினார்கள். இந்த நிலையில் கர்னல்ஹெரானும் மாபூஸ்கானும் தனியே பிரிந்து இரு திசைகளில் சென்று போரிட்டனர். ஆனால் துரதிருஷ்டவசமாக மாபூஸ்கான் முதலில் போரிடச் சென்றது, நெற்கட்டான் செவ்வல் பாளையத்துக்காரரான பூலித்வேருடன். மாபூஸ்கான் போன சுவடு மறைவதற்குள் பூலித்வேரின் படைகாளல் விரட்டியடிக்கப்பட்டான்.

அதனால் மாபூஸ்கான், கர்னல்ஹெரானுக்குச் செய்தி அனுப்டபி உடனே புறப்பட்டுவரச் செய்தான். இருவரும் சேர்ந்து பூலித்வேரின் கோட்டையை முற்றுகையிட்டனர். ஆங்கிலேயர் வசம் வெடிமருந்துகளும், துப்பாக்கிகளும், பீரங்கிகளும் இருந்தன. இத்தனை இருந்தும் பூலித்வேரின் கோட்டையில் ஒரு சிறு விரிசலைக் கூட உண்டு பண்ணமுடியவில்லை. பல நாட்கள் ஆகியும் பலன் ஒன்றுமில்லை.

மாறாக அவர்களிடம் இருந்த தளவாடங்களும் உணவும் தீர்ந்தது . இந்த செய்தியைத் தன் ஒற்றர்கள் மூலம் கேள்விப்பட்ட மன்னர் உடனடியாக கோட்டையை விட்டு வெளியே வந்து ஆங்கிலப்படைகளைக் கொன்று குவித்து சின்னாபின்னமாக்கினார். முதல் முதலாக வெடித்த சிப்பாய் கலகத்திற்கு நூறு ஆண்டுகளுக்கு முன்னரே பூலித்வேர் ஆங்கிலேயருக்கு எதிராக போரிட்டு அதில் வெற்றி பெற்றார். 1755- ஆம் ஆண்டு ஒலித் பூலித்தேவரின் முதல் சுதந்திரக் குரல் பின்னர் பலமுறை எதிரொலித்தது. 1772-ஆம் ஆண்டு முத்துவடுகநாதன், வேலு நாச்சியார் தலைமையிலும், 1795- ஆம் ஆண்டு முத்துராமலிங்க சேதுபதி தலைமையிலும், 1799-ஆம்ஆண்டு வீரபாண்டியகட்டபொம்மன் தலைமையிலும், 1801ஆம் ஆண்டு மருது சகோதரர் தலைமையிலும் எதிரொலித்தது.

பின்னர் 1806-ஆம் ஆண்டு வேலூர் சிப்பாய்க் கலகமாகவும், 1857-ஆம் ஆண்டு வடநாட்டு சிப்பாய்க்கலகமாகவும் வெடித்தது. பின்னர் அது நாடு தழுவிய போராட்டமாக உருப்பெற்றது. இவ்வாறு விட்டு விட்டு ஒலிகாமல் இந்த சுதந்திரக் குரல் ஒட்டுமொத்தமாக ஒரலித்திருக்குமேயானால் இந்திய நாடு அடிமைப் பட்டிருக்காது.

ஆங்கிலேயருடனான முதல் போரில் பூலித்வேர் வெற்றி பெற்றாலும் மறுபடியும் அவர்கள் தாக்குவார்கள்என்கிற காரணத்தினால் மீண்டும் பாளையகாரர்களை ஒன்றுபடுத்த பூலித்தேவர் முயற்சி செய்தார். ஆனால் அவருடைய எண்ணம் ஈடேறவில்லை. பல பாளையக்காரர்கள் ஆங்கிலேயர்களை எதிர்க்கத் துணிவின்றி தங்கள் அரசாட்சியே போதும் என்கின்ற சுயநலத்தோடு ஒதுங்கிவிட்டார்கள். பூலித்தேவரின் கூட்டணி முயற்சி ஆற்காடு நவாபுக்கும் ஆங்கிலேயர்க்கும் தெரியவந்தது. உடனே அவர்கள் மற்ற பாளையக் காரர்களோடு தொடர்பு கொண்டு அவர்களுக்குப் பதவி ஆசையைக் காட்டி, தங்கள் வசப்படுத்தினார்கள்.


தொடரும் . . . . . .



என்னார்