அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

நிவந்தத்தின் வகை

நிவந்தத்தின் வகை
இராசராசன் கிணற்றிலிருந்து தொட்டிக்கு நீர் இறைப்பார்க்கு அருமொழித் தேவன் மரக்காலால் நாள் ஒன்றுக்கு நெல் இருகுருணி ஆகத் திங்கள் ஆறுக்கு நெல் முப்பது கலமும், இப்பந்தலுக்கு மட்கலம் இடுவார்க்கு திங்கள் ஒன்றுக்கு நெல் இரு தூணியாகத் திங்கள் ஆறுக்கு நெல் நான்கு கலமும், இராசராசன் கிணற்றுக்கும் தொட்டிக்கும் சேதம்  ஏற்பட்டால், அவற்றைப் புதுப்பிக்க ஆண்டுதோறும் இரு கலனே இரு தூணி நெல்லும் ஆக 66 கலம் எட்டு மரக்கால் நெல் விளையக்கூடிய நிலத்தின் விலைக்குரிய பணத்தையும்,அதற்கு வரிக்கு உரிய பணத்தையும்  தனியூர் உக்கலாகிய விக்கிரமாபரணச்சதுர்வேதிமங்கலத்துச் சபையார், கண்ணன்
ஆருரானிடம் பெற்றுக்கொண்டு வரி இல்லாமல் (நிலத்தை விற்றுக் கொடுதது
அத்தர்மத்தை நடததுவதாய் இசைந்தனர் 

நல்ல ஊதியம் கொடுத்துள்ளார் எனக்குத் தெரிந்து 1962 வாக்கில் ஒரு நாள் முழுதும் வேலை செய்பவர்களுக்கு ஒரு மரக்கால் நெல் மட்டுமே கொடுத்தனர் இது இரட்டிப்பாக உள்ளது அந்த காலத்திலேயே பரவாயில்லை மன்னன் தொழிளார்களுக்கு ஊதியத்தை வாரிவழங்கியுள்ளார் .

Labels:

0மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு