அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

பாலாறு பத்திரிகை செய்தி

அ.தி.மு.க. பொதுச் செயலா ளர் ஜெயலலிதா வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஆந்திர அரசு குப்பம் அருகே பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழாவை 6.12.2007 அன்று நடத்த இருப்பதாக செய்திகள் வந்தி ருக்கின்றன. இந்த அடிக் கல் நாட்டு விழாவின் போது ஆந்திர மாநில முதல்- மந்திரி ராஜசேகர ரெட்டி யும் பங்கேற்பார் என்று தெரிகிறது. ஆந்திர அரசின் இந்த நடவடிக்கை வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவள்ளூர் மற்றும் சென்னை புறநகர் மக்களின் நலன்களுக்கு எதிரானது.

குப்பம் அருகே கணேசபுரத்தில் பாலாற்றின் குறுக்கே ஆந்திர அரசு அணை கட்டுவ தற்கான முயற்சியை கடந்த இரு ஆண்டுகளாக எடுத்து வருகிறது. இதை ஆரம்ப கட்ட நிலையிலேயே நான் எதிர்த்ததோடு மட்டுமல்லா மல், உடனடியாக 2006-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எனது ஆட்சிக் காலத்தில் ஆந்திர அரசின் முயற்சியை தடுக்கும் விதமாக உச்சநீதி மன்றத்தில் தமிழக அரசின் சார்பில் மனுத்தாக்கல் செய் யப்பட்டது.

பின்னர் ஏற்பட்ட ஆட்சி வழக்கை துரிதப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை.

ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுதற் கான அடிக்கல் நாட்டு விழா தமிழக மக்களின் நலனுக்கு எதிரானதாகும். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப் பணை கட்டுவதை உடனடியாக தடுக்க வலியுறுத்தி அ.தி.மு.க. சார்பில் வருகிற 26.11.2007 (திங்கட்கிழமை) அன்று காலை 10 மணியளவில் வேலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்பு செயலாளர் செ.செம்மலை தலைமையிலும், வேலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் வாசு, வேலூர் மேற்கு மாவட்ட செயலாளர் வீரமணி, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயலாளர் முக்கூர் சுப்பிரமணியன், திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி கோ.அரி எம்.எல்.ஏ. மற்றும் திருவள்ளூர் மாவட்ட கழக செயலாளர் மூர்த்தி ஆகியோர் முன்னிலையிலும் நடை பெறும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

too late

Labels:

6மறுமொழிகள்:

மணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

அன்புடையீர்,

நாங்கள் ஆழி பதிப்பகத்திலிருந்து தொடர்புகொள்கிறோம். அமரர் சுஜாதா நினைவு அறிவியல் புனைகதை போட்டி தொடர்பாக உங்களுக்கு ஒரு மடல் அனுப்பவேண்டும். தங்கள் மின்னஞ்சல் முகவரியை sujatha.scifi@gmail.com க்கு அனுப்புங்கள். தொடர்புகொள்கிறோம்.

நன்றி

 
மணிக்கு, எழுதியவர்: Blogger இப்னு அப்துல் ரஜாக்

pls visit and give ur feedback

http://www.peacetrain.blogspot.com/

 
மணிக்கு, எழுதியவர்: Blogger www.bogy.in

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 
மணிக்கு, எழுதியவர்: Blogger www.bogy.in

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

 
மணிக்கு, எழுதியவர்: Blogger Unknown

உங்கள் பதிவுகளை jeejix.com இல் பதிவு செய்யுங்களேன், அரசியல் , சினிமான்னு ஆறுவகை இருக்கு
ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு வகையில் அதிகம் பார்க்கப்பட்ட பதிவுக்கு jeejix பணம் குடுக்குதாம்.
ஆயிரக்கணக்கா என் ஆர் ஐ இருக்காங்கப்பா அந்த சைட்ல.
நீங்க அந்த சைட்ல பதிவு செய்தீங்கன்னா மறக்காம என்னோட ஈமெயில் (sweathasanjana அட் ஜிமெயில் )
ஐடிய அறிமுகபடுதினவங்க அப்படின்னு அவங்க ஈமெயில் ஐடிக்கு அனுப்புங்க. புண்ணியமா போகட்டும்
:)

 
மணிக்கு, எழுதியவர்: Blogger AHSIRAH

nice blog

visit my blog

tamil web library

 

Post a Comment

<< முகப்பு