அறிவானந்தன்

கண்டவை,கேட்டவை,பார்த்தவை,படித்தவை,மனதில் உதித்தவை

சனி, ஜனவரி 07, 2006

பாலாற்றின் குறுக்கே அணை

வட தமிழகத்தில் பாயும் பாலாற்றின் குறுக்கே ஆந்திர மாநிலத்தில் அணை கட்ட தமிழக அரசும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

அதில், '' பாலாறு வடதமிழகத்தில் ஒரு லட்சம் ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதியை அளிக்கிறது. வேலூர், காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கும் சென்னை புறநகர்ப் பகுதிகளுக்கும் பிரதான குடிநீர் ஆதாரமாகத் திகழ்கிறது. அத்தகைய பாலாற்றில் ஆந்திர மாநிலம் குப்பத்தில் 2 டி.எம்.சி. அளவுக்கு கொள்ளளவு கொண்ட அணையைக் கட்ட ஆந்திர அரசு முடிவுசெய்துள்ளது வடமாவட்ட மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. 1892 ஒப்பந்தத்தின்படி, மாநிலங்களுக்கு இடையில் ஓடும் பாலாற்றில் வரும் நீரைத் தடுக்கும் வகையில் புதிய அணையையோ கட்டுமானகங்களையோ தமிழக அரசின் முன் அனுமதியின்றி கட்டக்கூடாது. பாலாற்றில் அணை கட்டுவது தொடர்பாக ஆந்திர அரசு இதுவரை எந்தத் தகவலும் அளிக்கவில்லை. இப்பிரச்சனையில் உடனே தலையிட்டு அணை கட்டுவதை தடுத்து நிறுத்தவேண்டும்'' யார் செய்வார்கள் இதை .


காவிரிக்கு காவிரியும் போய்

பாலாறும் பாலாய் போய்

தமிழ் நாடும் நாசமா போகப்போகிறது

நீரோடும் ஆற்று மணலில் காணல் நீரோடப் போகுதைய்யா!!!

மேட்டூர் அணை

2மறுமொழிகள்:

09 ஜனவரி, 2006 11:34 மணிக்கு, எழுதியவர்: Blogger rnatesan

என்னார் அவர்களே,
என்னார் அவர்களே,
தமிழ் நாட்டு கதியப் பாத்தியளா!கேக்க நாதி இல்லை.நம்ப மந்திரி சிதம்பரம் சார் சொல்லியுருக்கார்,பேங்க் லே சேமிப்பவன் புத்திசாலி,கடன் வாங்குபவனோ அதி புத்திசாலி என்று!அவர் சொல்லாம விட்டது கடனை கட்டாம போறவன் உலக மஹா புத்திசாலி என்று!அவர் கவலை இதான் இப்போ!
அடுத்தது அமராவதி பாலம்தான் இப்போ முக்கியம்.
என்னார் அவர்களே,
தமிழ் நாட்டு கதியப் பாத்தியளா!கேக்க நாதி இல்லை.நம்ப மந்திரி சிதம்பரம் சார் சொல்லியுருக்கார்,பேங்க் லே சேமிப்பவன் புத்திசாலி,கடன் வாங்குபவனோ அதி புத்திசாலி என்று!அவர் சொல்லாம விட்டது கடனை கட்டாம போறவன் உலக மஹா புத்திசாலி என்று!அவர் கவலை இதான் இப்போ!
அடுத்தது அமராவதி பாலம்தான் இப்போ முக்கியம்.
சீக்கிரம் ஏதாவது சொல்லுங்க, நான் திருச்சிக்கு வேணாலும் வர்ரேன்!எனக்கு ரொம்ப புடிச்ச ஊர்!



சீக்கிரம் ஏதாவது சொல்லுங்க, நான் திருச்சிக்கு வேணாலும் வர்ரேன்!எனக்கு ரொம்ப புடிச்ச ஊர்!தமிழ் நாட்டு கதியப் பாத்தியளா!கேக்க நாதி இல்லை.நம்ப மந்திரி சிதம்பரம் சார் சொல்லியுருக்கார்,பேங்க் லே சேமிப்பவன் புத்திசாலி,கடன் வாங்குபவனோ அதி புத்திசாலி என்று!அவர் சொல்லாம விட்டது கடனை கட்டாம போறவன் உலக மஹா புத்திசாலி என்று!அவர் கவலை இதான் இப்போ!
அடுத்தது அமராவதி பாலம்தான் இப்போ முக்கியம்.
சீக்கிரம் ஏதாவது சொல்லுங்க, நான் திருச்சிக்கு வேணாலும் வர்ரேன்!எனக்கு ரொம்ப புடிச்ச ஊர்!

 
19 ஜனவரி, 2006 20:27 மணிக்கு, எழுதியவர்: Blogger ENNAR

நடேசன் நன்றி காலம் கெட்டுப்போச்சு

 

Post a Comment

<< முகப்பு