முல்லை பெரியாறு
இந்த அணையைப்பற்றி இப்பொழுது தமிழக கேரளஅரசுகள் விவாதிக்கிறார்களே அந்த அணையை கட்டியவர் யார் தெரியுமா?
கர்னல் பென்னி குக்:
21ம் நூற்றாண்டின் அசாத்திய மாகத் தெரிகிற நதி நீர் இணைப்பை 1895ல் நிகழ்திக் காட்டியவர் ஆங்கிலேய எஞ்சினியர் கர்னல் பென்னி குக். பெரும் சவால்களுக்கு இடையில் கேரளா நோக்கிப் பாய்ந்து கடலில் வீணான முல்லை - பெரியாறு நதிகளின் உபரி நீரை தமிழகத்தை நோக்கித்திருப்பிவிட்டார். இந்த அணை பல முறை நதிநீர் ஓட்டத்தால் தகர்க்கப்பட்டது. ஆங்கிலேய அரசு திட்டத்தைக் கை விட்டது. ஆனால் இங்கிலாந்தில் உள்ள வீடு, உடமைகளை விற்று சொந்த முயற்சியால் அணையைக் கட்டினார் குக். அணையிலிருந்து சுரங்கம் அமைத்து முல்லை பெரியாறின் உபரிநீரை வைகை நதியில் பாயச்செய்தார்.
நன்றி இந்தியா டுடே
7மறுமொழிகள்:
உண்மையில் ஒரு நல்ல செய்தியைத்தான் பகிர்ந்துகொண்டுள்ளீர்கள்
நன்றி சிவபாலன்
பென்னி குக் பெரியாறு கால்வாய்களை கட்டியதைப் பற்றி பல சுவராசியமான தகவல்கள் உள்ளன. இப்படி ஏதோ கொஞ்சமுடன் நிறுத்தி விட்டீர்களே!
ஆமாம் எனக்கு தெரிந்தவற்றை படித்த வற்றைக் கொடுத்துள்ளேன் மீதத்தை தாங்கள் சொன்னால் கேட்க ஆவலாக உள்ளேன்.
நல்ல தகவல் இரத்தினவேலு சார்.
பணி தொடர வாழ்த்துக்கள்.
நன்றி கலை
"இங்கிலாந்தில் உள்ள வீடு, உடமைகளை விற்று சொந்த முயற்சியால் அணையைக் கட்டினார் குக்"
இன்று இந்த அணையைவிற்று பணம் சேர்க்கப்பார்ப்பார்கள்
Post a Comment
<< முகப்பு