மது சிந்துக் கலகம்
¯
இந்த வார(18-24-09-06)
தாரகை யாக தமிழ் மணம்
என்னை தேர்வு செய்துள்ளதற்கு
முதலில் அந்நிர்வாகிகளுக்கு நன்றியைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.எனது ஆக்கங்களுக்கு
முடிந்தவர்கள் தங்கள் கருத்துகளை வளமைபோல்
தெரிவிக்கலாம் .வேறு என்ன நான் சொல்ல வேண்டியிருக்கிறது.
தங்களின் என்னார்
மது சிந்துக் கலகம்
இரண்டு ஆலமரங்கள் ஒரு காட்டில் இருந்தன. ஒரு மரத்தின் கிளைகளில் ஒரு தேன்ராட்டு (தேன்கூடு) இருந்தது.
இரண்டு மரத்தின் கீழ் இரண்டு நாட்டு மன்னர்கள் வேட்டையாடி களைத்து வந்து படைகளுடன் தங்கினர்.
தேன் கூட்டிலிருந்து ஒரு தேன் துளி கீழே விழுந்தது. அதில் ஒரு ஈ உட்கார்ந்தது. அந்த ஈயை ஒரு ஈப்புலி பாய்ந்து பிடித்தது. அந்த ஈபுலி மீது ஒரு பல்லி பாய்ந்தது. அப்போது பக்கத்தில் இருந்த நாய் அந்த பல்லியின் மேல் பாய இதைக்கண்ட அடுத்த ஆலமரத்தடியில் இருந்து அந்த நாட்டு மன்னன் படையில் இருந்து ஒரு நாய் இந்த நாய்மீது பாய்ந்தது. இரண்டுக்கும் சண்டை நடந்தது.
இந்த நாய்க்காரன் அந்த நாயை அடித்தான். அடிபட்ட நாய்க்காரன் அடித்தவனை அடித்தான். இரண்டு சேனைகளும் போர் செய்தது. காரணம் மற்றவர்களுக்குத்தெரியாமலே சண்டை நடந்தது.
இந்த நிலைமையில் விவரமற்ற சின்ன காரியத்திற்காக அதிக கேவலமான காரியம் நடந்து, அதன் மூலம் விபரீதமான விளைவுகள் வராமலிருப்பதற்கு இரண்டு மந்திரிகள் மந்திரிக்கழகு வரும் பொருள் உரைத்தல் என்றிருந்த மந்திரிகள்:
இன்றைக்குள்ள மந்திரிகள் வரும் பொருள் சுருட்டல் என்ற நிலையில் உள்ள மந்திரிகள்.
அந்த மந்திரிகள் இரண்டுபோரும் சேனைக்கு முன் வந்து நின்றவுடன் சண்டை நின்றது. என்ன காரணம் என்று கேட்கவே எல்லோரும் சிரித்தார்கள்.
இது தான் மது சிந்துக் கலகம். ,இது போல் நாட்டில் எவ்வளவோ விளங்காத சண்டைகள் சச்சரவுகள் வந்து கொண்டு தான் இருக்கிறது. சற்று நேரம் யோசித்தால் அச்சச்சரவுகளை விளக்கலாம்.
31மறுமொழிகள்:
என்னார் ஐயா,
நட்சத்திர வார வாழ்த்துக்கள். உங்களின் பல பதிவுகளைப் படித்துச் சுவைத்திருக்கிறேன். படிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். வாருங்கள். நல்ல பதிவுகளாகத் தாருங்கள்.
வெற்றி
வாழ்த்துக்கு நன்றி தாங்கேட்டதை வழங்க சித்தமாக உள்ளேன்
என்னார் ஐயா
நிறைந்த மகிழ்ச்சி.ஆன்மிகமும்,பல்சுவையுமாக தந்து எங்களை மகிழ்விப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன்.இந்த வாரம் இனி இனிய வாரம்
செல்வன்
நன்றி
ஆகா, கேட்கவே சந்தோஷமாக இருக்கிறது!.
தமிழக அரசு வழங்க விருக்கும் 2 ஏக்கர் நிலம் கிடைத்ததைவிட, உண்மையிலேயே சந்தோசமாக இருக்கிறது
வழக்கம்போல சிறப்பாக எழுதுங்கள்!
வாழ்த்துக்கள்
வாத்தியார்
சுப்பையா சார்
நன்றி
ஆரம்பத்திலேயே களை கட்டிவிட்டது உங்கள் வாரம். தொடரட்டும்.
ஓகை
நன்றி
என்னார் ஐயா வாழ்த்துக்கள். அருமையான கதையுடன் வாரத்தைத் தொடங்கி இருக்கிறீர்கள். இந்த வாரத்தை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
என் ஆர் ஐயா!
நட்சத்திர வாழ்த்துக்கள்.
பல நல்ல விடயங்களைக் கூறுவீர்கள்;என எதிர் பார்க்கிறேன்.
யோகன் பாரிஸ்
குமரன், ஜான்
தங்கள் வாழ்த்திற்கு நன்றி
//சற்று நேரம் யோசித்தால் அச்சச்சரவுகளை விளக்கலாம்.
//
நல்ல கருத்துடன் வாரத்தை துவக்கி உள்ளீர்கள். வாழ்த்துக்கள்.
சிபி
நன்றி தங்கள் கருத்துக்கு
என்னார்!
உங்கள் நட்சத்திர வாரம் இனிதாய் அமைய நல்வாழ்த்துக்கள்.
நன்றி!
மலை நாடன்
நன்றி
உங்கள் நட்சத்திரம் வார சிறப்புற இந்த சின்னக்குட்டியின் வாழ்த்துக்கள்
சின்னக்குட்டி
நன்றி
விண்மீன் வார வாழ்த்துகள் என்னார் ஐயா.
குமரன்
வாழ்த்துக்கு நன்றி
ஞானம் சார்
நன்றி
என்னார் அவர்களே, உங்கள் பதிவுகள் பலவும் பயனுள்ளவை, கருத்து செறிந்தவை. இவ்வார எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
நட்சத்திர வாரத்திற்கு வாழ்த்துக்கள் !!
மணியன்
நன்றி
அய்யா,
நட்சத்திர வார பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்.
சிவாபாலன்
நன்றி
சந்திரவதனா
நன்றி
என்னார் ஐயா,
வாழ்த்துக்கள். இந்த வாரம் இனிய வாரமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
என்னார் என்னும் இன்னார் இந்த வாரம் விண்மீனானார். மகிழ்ச்சி பெருக்கெடுக்கிறது.
சிந்திய தேந்துளி இனிப்பாயினும் கசப்பான விளைவினையும் தரயியலும் என்பதே உலக உண்மை. இதைத்தான் வண்ணத்துப்பூச்சி விளைவு என்பார்கள் ஆங்கிலத்தில்.
இந்த விண்மீன் வாரத்தில் நீங்கள் சிந்துந் தேந்துளிகள் நன்மையை மட்டுமே பயக்குமென வேண்டுகிறேன். என்னுடைய உளமார்ந்த வாழ்த்துகள்.
ஐயா ஈப்புலி என்றால் என்ன?
விரும்பிப் படிக்கும் தமிழ்த்தேனின் ஒரு துளி கூட சிந்தாமல் சுவைத்து, மது சிந்துக் கலகம் வராமல் பார்த்துக் கொள்கிறேன்!!
வாழ்த்துகள்!
அடிச் சக்கை, நீங்களா இந்த வாரம்?
வாங்க நட்சத்திரமே! வாழ்த்து(க்)கள்,
வெட்டிப்பயல் அவர்வகளே
நன்றி
Post a Comment
<< முகப்பு